தேனியில் பயங்கரம்.. திமுக பிரமுகர் குத்திக் கொலை.. நடந்தது என்ன?
Theni Murder : தேனியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக மூன்று பேர் கொண்ட கும்பல் திமுக பிரமுகரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி, ஜூன் 27 : தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). இவர் பேக்கரி கடை ஒன்று நடத்தி வந்தார். மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக முன்னாள் இளைஞரணி அணி பொறுப்பாளாராக பிரபு இருந்துள்ளார். அதே சின்னமனூர் பகுதியில் வசித்து வருபவர் சுருளிமணி (43). இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இது சம்பந்தமான சுருளிமணியின் மனைவி ஜெயபிரியா என்பவருக்கு பிரபு அடிக்கடி தொடர்பு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுருளிமணி கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, 2025 ஜூன் 26ஆம் தேதியான நேற்று இரவு பணம் பற்றி பேசுவதாக தொடர்பாக பிரபுவை சுருளிமணி மற்றும் அவரது நண்பர் முத்துராசா அழைத்துள்ளனர்.
திமுக பிரமுகர் குத்திக் கொலை
அங்கு வந்த பிரபுவுடன் சுருளிமணி, முத்துராசா, பிரபாகரன் ஆகியோர் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஜெயபிரதாவிடம் போனில் பேசுவது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது, சுருளிமணி வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபுவை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில், பிரபு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனை அடுத்து, மூன்று பேருக்கு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.




தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபுவை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதனை அடுத்து, பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
3 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளிமணி, முத்துராசா, பிரபாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது. தமிழகத்தில் அண்மைக் காலங்களில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க மாநில காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ரவுடிகளில் அட்டூழியத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் பாலமுருகன் என தெரியவந்துள்ளது. பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்னையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.