தேர்தல் அறிக்கையை காப்பியடித்தோமா? .. திமுக லேப்டாப் கொடுத்தது ஏன்? கொதித்த இபிஎஸ்..

EPS about election manifesto: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போதே குலவிளக்கு திட்டம், மகளிருக்கு ரூ.1,500 உதவித்தொகை, மகளிருக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, அம்மா இல்ல திட்டம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என்றார்.

தேர்தல் அறிக்கையை காப்பியடித்தோமா? .. திமுக லேப்டாப் கொடுத்தது ஏன்? கொதித்த இபிஎஸ்..

எடப்பாடி பழனிசாமி

Published: 

22 Jan 2026 15:30 PM

 IST

சென்னை, ஜனவரி 22: கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. பேரவை விதிகளின்படி நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முடியும். நான் பேசிவிடக்கூடாது என்பதால், இல்லாத விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு

5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு:

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகளில் 40 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர், 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கறிக்கோழி வளர்ப்பு, கூலி உயர்வு போன்ற கோரக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து 20 ஆக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. 6 மாதமாக விவசாயிகள் போராடி வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? முத்தரப்பு பேச்சுவாரத்தை நடத்தப்படும் என அரசு அறிவித்துவிட்டு, பின்வாங்கியது சந்தேகத்தை எழுப்புகிறது. கறிக்கோழி வளர்ப்பு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளாதா? அவர்கள் என்ன நிராகரிக்கப்பட்டவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் அறிக்கையை காப்பியடித்தோமா?

மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போதே குலவிளக்கு திட்டம், மகளிருக்கு ரூ.1,500 உதவித்தொகை, மகளிருக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, அம்மா இல்ல திட்டம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என்றார்.

மேலும் பேசிய அவர், தாங்கள் வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஏற்கனவே அறிவித்துவிட்டேன். மடிக்கணினி திட்டம் அம்மா அவர்கள் 52 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்குக் கொடுத்தோம். நான்காண்டுகள் இந்த அரசு நிறுத்திவிட்டு, இப்போது தோல்வி பயத்தின் காரணமாக 10 லட்சம் பேருக்குக் கொடுப்பதாக அறிவித்தனர், அதைக்கூட முழுமையாக கொடுக்க முடியாது.

மேலும் படிக்க: ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..

மாணவர்கள் வாக்குகளை பெறவே லேப்டாப்:

அறிவித்த உடனே தயாரித்துக் கொடுக்கும் வகையில் நிறுவனங்கள் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்துள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு மாணவர்களின் வாக்குகளை பெறத்தான் இத்திட்டம். உண்மையிலேயே மாணவர் மீது அக்கறை இந்தால் கல்லூரி திறக்கும்போதே கொடுத்திருக்கனும், இப்போது கொடுப்பதால் எந்த வித பயணும் இல்லை. அதிமுக திட்டம் என்பதால் முடக்கினார்கள், இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டதால் வாக்குகள் பெற மீண்டும் இத்திட்டம் அறிவித்துள்ளது.

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?