AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தொகுதி மறுவரையறை.. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

Southern Zonal Council: தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். தமிழகத்திற்குரிய 39 மக்களவைத் தொகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார்.

“தொகுதி மறுவரையறை.. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
அமைச்சர் நிர்மல் குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Aug 2026 07:19 AM IST

சென்னை, ஆகஸ்ட் 21: மத்திய அரசு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான பொதுவான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் அமைக்கப்பட்டுள்ள தென் மண்டலக் குழுவின் 31-வது மாநாடு முக்கிய திருப்பங்களுடன் நிறைவடைந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தென்னக மாநிலங்களின் சார்பில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளும் நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆழமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இக்கூட்டத்தின் முடிவில், தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் நிலுவையில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்துக் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து மாநில அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் விரிவாக விளக்கமளித்தார்.

இதையும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

பல்வேறு விவகாரங்களில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள்:

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்துப் பேசிய அமைச்சர், மின்சாரத் தேவைகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான நிலங்கள் ஒதுக்கீடு, மாநிலங்களுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்துப் பிரச்சனைகள் உள்ளிட்ட அன்றாட நிர்வாகம் சார்ந்த பல கோரிக்கைகள் குறித்துத் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தென் மாநிலங்களின் நலன்களை ஒருங்கிணைக்கும் வகையில் அடுத்த தென் மண்டலக் குழுவின் மாநாட்டைத் தெலுங்கானா மாநிலத்தில் கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுச் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் மாற்றமில்லை:

தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்தார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மக்களவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், அதில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவமான 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் செய்யக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார். மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய காரணத்திற்காகத் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்றும், தமிழகத்தின் கோரிக்கையைத் தென் மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான மற்ற மாநிலங்களும் வழிமொழிந்து வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காவேரி விவகாரத்தை விவாதிக்க முடியாது:

காவேரி நீர் பங்கீடு மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். காவேரி விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலும், காவேரி மேலாண்மை வாரியத்தின் பரிசீலனையிலும் நிலுவையில் இருப்பதால், அது குறித்து இத்தகைய கவுன்சில் கூட்டங்களில் அதிகாரப்பூர்வமாக விவாதிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். அதேவேளையில், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் எனப் கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தற்போதைய அணை மிகவும் பலமாகவும் உறுதியாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். எனவே புதிய அணை தொடர்பான கேரள அரசின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தற்போதைய அணையின் பாதுகாப்பில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

Follow Us