தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்கள்..
தென்மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தென்மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் தெலங்கானா முதலமைச்சர்கள் இதில் பங்கேற்கவில்லை. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளப் பகிர்வு, கல்வி, பொருளாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, மாநில எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குவது தொடர்பாகவும் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
