AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!

Historic Moment in TN Assembly: தமிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நீண்டகால மரபை உடைத்து, முதல்வர் விஜய் தனது பிரத்யேக இருக்கையிலிருந்து விலகி அமைச்சர்களுக்கான வரிசையில் அமர்ந்து உரையாடிய நிகழ்வு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே அமர்ந்து அவர் ஆலோசனை நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Aug 2026 08:51 AM IST

சென்னை, ஆகஸ்ட் 28: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் முதலமைச்சருக்கெனத் தனியாகவும், சற்றே பெரிய அளவிலான பிரத்யேக இருக்கை ஒதுக்கப்படுவதும், அதற்கு அடுத்தபடியாக மூப்பு நிலைக்கு ஏற்ப அமைச்சர்கள் அமர்வதும் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். ஆனால், இந்த மரபை உடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் தனது பிரத்யேக இருக்கையை விட்டு எழுந்து சென்று அமைச்சர்களுக்கான வரிசையில் அமர்ந்து உரையாடிய அரிதான நிகழ்வு பேரவையில் பெரும் ஆச்சரியத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரைந்த 4 தமிழ்நாடு அமைச்சர்கள்… மீட்புப் பணிகளில் வேகம்!!

பேரவை வரலாற்றில் முதல்முறை:

நேற்றைய தினம் சட்டமன்றப் பிற்பகல் அமர்வின் போது, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கு வலதுபுறம் அமைந்திருந்த தனது வழக்கமான இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்த முதல்வர் விஜய், திடீரென அங்குமிங்கும் இயல்பாக நடந்து சென்று, அமைச்சர்கள் அமரும் வரிசைக்குச் சென்றார். அங்கு அவைத் தலைவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவருக்கும் இடையே காலியாக இருந்த இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். முதலமைச்சர் ஒருவர் தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து, அமைச்சர்களின் வரிசையில் சென்று அமர்ந்த நிகழ்வு பேரவை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

கவனத்தை ஈர்த்த முதல்வர் விஜய்:

அமைச்சர்களின் வரிசையில் அமர்ந்தவாறு சக அமைச்சர்களுடன் அவர் இயல்பாகக் கலந்துரையாடிய காட்சிகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன. வழக்கமாக, அவையின் பிற உறுப்பினர்களுடன் சுருக்கமாக ஆலோசனை நடத்த உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளைத் தற்காலிகமாக மாற்றி அமர்வது வழக்கம்தான் என்றாலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே தனது சிறப்பு இருக்கையைக் கைவிட்டு அமைச்சர்களோடு அமைச்சராக வரிசையில் அமர்ந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!

முதல்வரின் எளிய அணுகுமுறை:

அன்றைய தினம் காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றப் பிறகு சட்டமன்றத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய், பேரவை நடவடிக்கைகளுக்கு இடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் உயர்நிலை ஆலோசனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மரபுகளைக் கடந்து அமைச்சர்களுடன் நெருக்கமாக அமர்ந்து முதல்வர் விஜய் ஆலோசித்த இந்த எளிய அணுகுமுறை அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலான விவாதத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Follow Us