AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இரவோடு இரவாக போலீசார் நடத்திய வேட்டை.. 75 ரவுடிகள் கைது..

சென்னை காவல்துறையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த சிறப்பு ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. தி.நகர் காவல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், முன் வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரவுடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இரவோடு இரவாக போலீசார் நடத்திய வேட்டை.. 75 ரவுடிகள் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 May 2026 08:58 AM IST

மே 20, 2026: சென்னையில் நள்ளிரவில் போலீசார் நடத்திய அதிரடி “ஸ்பெஷல் டிரைவ் ஆப்ரேஷன்” மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள், முன் குற்றப்பதிவுகள் கொண்ட நபர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் கானா பாடகர் இரட்டை கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட ரவுடிகள்:

சென்னை காவல்துறையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த சிறப்பு ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. தி.நகர் காவல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், முன் வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரவுடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் அடையார் காவல் மாவட்டத்திலும் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 16 ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. தவெக மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்..

மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் நடைபெற்ற “ஸ்பெஷல் டிரைவ் ஆப்ரேஷன்” மூலம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை:

அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போதைப் பொருள் விற்பனை, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில ஆவணங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் ரவுடி செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் நடைபெற்ற கானா பாடகர் இரட்டை கொலை சம்பவத்துக்குப் பிறகு, சென்னை நகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை தொடர்ந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எந்தவித தளர்வும் காட்டப்படமாட்டாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us