AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவை உலுக்கிய வயநாடு நிலநடுக்கம்.. 2வது நாளாக 5 பேரை தேடும் பணிகள் தீவிரம்!

Massive Landslide In Wayanad | ஜூலை 07, 2026 அன்று கேரள மாநிலம், வயநாடு பகுதியி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியான நிலையில் 9 பேர் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவை உலுக்கிய வயநாடு நிலநடுக்கம்.. 2வது நாளாக 5 பேரை தேடும் பணிகள் தீவிரம்!
மீட்பு பணிகள் தீவிரம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jul 2026 07:12 AM IST

வயநாடு, ஜூலை 09 : கேரள (Kerala) மாநிலம், வயநாடு (Wayanad) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – 5 பேர் பலி

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி அடுத்த கல்லாடி என்ற பகுதியில் சுரங்க பாதை அமைக்கு பணிகள் நடைபெற்று வந்தது. வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜூலை 07, 2026 அன்று மீனாட்சி பாலம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

இதையும் படிங்க : H Vinoth: தயாரிப்பாளராக அறிமுகமான ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத்..!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் – அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்

அன்றைய தினம் அந்த பகுதியில் மழை பெய்துக்கொண்டு இருந்தது. அப்போது திடீரென சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை கண்டு அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். ஆனால், ஒருசில நொடிகளில் அந்த பகுதி முழுவதையும் நிலச்சரிவு சூறையாடியது.

இதையும் படிங்க : கேரளா வயநாட்டில் நிலச்சரிவு.. சிக்கியவர்கள் விவரம் அறிய அரசு தீவிரம்!

இரண்டாவது நாளாக தெடப்படும் 5 பேர்

இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பலியான நிலையில், 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow Us