Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

Chennai University Semester Exams: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு 2025 ஜூன் 15 அன்று நடைபெறுவதால், அதே தேதியில் திட்டமிடப்பட்ட சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன?
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்புImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 Jun 2025 06:46 AM

தமிழ்நாடு ஜூன் 14: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) குரூப்-1 தேர்வு (Group 1 Exam) 2025 ஜூன் 15 அன்று நடைபெறவுள்ளது. இதே நாளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் (Chennai University Distance Education Semester Exams) ஒத்திவைக்கப்பட்டன. தேர்வுகளுக்கான புதிய தேதி www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும். குரூப்-1 தேர்வு மூலம் 70 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பல பதவிகள் உள்ளன. முதன்மை, முதலாம் நிலை, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களில் நடைபெற உள்ளது.

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடைபெறும் குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுகள் 2025 ஜூன் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கின்றன. இதனால், அதே நாளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தேர்வுக்கான மாற்றுத் தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அவை www.ideunom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் குழப்பமின்றி புதுப் பட்டியலை அறிந்து செயல்படலாம்.

குரூப்-1 தேர்வுக்காக செமஸ்டர் தேர்வு ஓத்திவைப்பு

இதற்கிடையில், TNPSC வெளியிட்ட அறிவிப்பின்படி, மொத்தம் 70 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 28 துணை ஆட்சியர், 7 காவல் துணை கண்காணிப்பாளர், 19 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 6 தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகள் அடங்கும்.

உதவி வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களும் சேர்ப்பு

மேலும், குரூப்-1ஏ பிரிவில் 2 உதவி வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 1 முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஹால் டிக்கெட்டுகள் தற்போது விண்ணப்பதாரர்களுக்குக் கிடைத்துள்ளன.

புதிய தேதி விரைவில் அறிவிப்பு

இதனையடுத்து, தேர்வின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிந்து கொள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிட வேண்டியது அவசியமாகும்.

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம் (University of Madras) இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள Chepauk, Marina, Guindy, Taramani உள்ளிட்ட ஆறு வளாகங்களில் இயங்குகிறது. இங்கு கலை, அறிவியல், வணிகம், தொலைதூரக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் UG, PG மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. தேசிய மற்றும் உலக தரவரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.

திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்..
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்.....
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India...