AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

Chennai street dogs feeding places list: சென்னை மாநகராட்சி குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க மற்றும் நாய் கடி அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 39 இடங்களை அவற்றுக்கு உணவளிப்பதற்காக பிரத்தியேகமாகப் பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Jul 2026 09:43 AM IST

சென்னை, ஜூலை 18: சென்னையில் பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் மற்றும் அண்டை வீட்டாருடைய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கென பிரத்தியேகமாக 39 இடங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!

நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

சென்னையில் உள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் தெருக்களிலேயே நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாகப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து உணவளிக்கப்படுவதால், குறிப்பிட்ட தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் பெருகுகிறது. மேலும், உணவிற்காக நாய்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போதும், பிற வாகனங்களைத் துரத்தும் போதும் பொதுமக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

அண்டை வீட்டார் இடையே மோதல்கள்:

குடியிருப்புப் பகுதிகளின் நடுவே உணவளிப்பவர்களுக்கும், நாய்களால் தொல்லை ஏற்படுவதாகக் கூறும் அண்டை வீட்டாருக்கும் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள், மோதல்கள் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதைத்தொடர்ந்து, இந்திய விலங்கு நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், நாய்களுக்கு உணவளிப்பதற்கான இடங்களை உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே சென்னை மாநகராட்சி தற்போது இந்த இடங்களை முறைப்படுத்தியுள்ளது.

39 இடங்களின் பட்டியல் விபரம்:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக உள்ள, பாதுகாப்பான இடங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 39 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, மண்டலம் 1 (திருவொற்றியூர்): 2 இடங்கள், மண்டலம் 2 (மணலி): 2 இடங்கள், மண்டலம் 3 (மாதவரம்): 2 இடங்கள், மண்டலம் 4 (தண்டையார்பேட்டை): 3 இடங்கள், மண்டலம் 5 (ராயபுரம்): 6 இடங்கள் (அதிகபட்சமாக இந்த மண்டலத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன), மண்டலம் 6 (திரு.வி.க நகர்): 3 இடங்கள், மண்டலம் 7 (அம்பத்தூர்): 2 இடங்கள், மண்டலம் 8 (அண்ணா நகர்): 3 இடங்கள்.

மண்டலம் 9 (தேனாம்பேட்டை): 3 இடங்கள், மண்டலம் 10 (கோடம்பாக்கம்): 3 இடங்கள், மண்டலம் 11 (வளசரவாக்கம்): 2 இடங்கள், மண்டலம் 12 (ஆலந்தூர்): 2 இடங்கள்,
மண்டலம் 13 (அடையாறு): 3 இடங்கள், மண்டலம் 14 (பெருங்குடி): 2 இடங்கள், மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்): 1 இடம்.

இது முழுமையான தடை அல்ல; ஒழுங்குமுறை:

சென்னை மாநகராட்சி நாய்களுக்கு உணவளிக்க முழுமையாகத் தடை விதிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தெருக்களிலோ அல்லது குடியிருப்புகளின் நுழைவாயில்களிலோ நாய்களுக்கு உணவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, மாநகராட்சி தங்களது பகுதிக்கு உட்பட்டு அறிவித்துள்ள இந்த 39 பிரத்தியேக இடங்களுக்குச் சென்று மட்டுமே இனி தெருநாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!

இந்த நடைமுறையின் மூலம் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் தேவையற்ற மோதல்களையும் தவிர்க்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow Us