AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அரசு மீதான குதிரைபேர புகார் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போதிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அதனைப் பொதுநல மனுவாக இல்லாமல், முறையான தேர்தல் வழக்காகவோ அல்லது அதற்குரிய மாற்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்காகவோ தாக்கல் செய்தால், நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்ற தொனியும் நீதிபதிகளின் வாதத்தில் இருந்து வெளிப்பட்டது.

தவெக அரசு மீதான குதிரைபேர புகார் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உச்சநீதிமன்றம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Jun 2026 13:41 PM IST

டெல்லி, ஜுன் 19: தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைபேரம் நடைபெற்றதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில், எந்தவொரு கட்சிக்கும் சட்டமன்றத்தில் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குதிரைபேரத்தில் ஈடுபட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று தங்களது பெரும்பான்மையை நிரூபித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்

ஜனநாயகத்தில் இதுபோன்ற முறைகேடான நடைமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

நீதிமன்ற விசாரணை மற்றும் உத்தரவு:

உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால சிறப்பு அமர்வில், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் குதிரைபேர புகார்களைப் பொதுநல வழக்கின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க முடியாது என்றும், அது நீதிமன்றத்தின் இந்த வரம்புக்குள் வராது என்றும் திட்டவட்டமாகக் கூறினர். இதையடுத்து, கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

நீதிபதிகள் காட்டிய மாற்று வழி:

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போதிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அதனைப் பொதுநல மனுவாக இல்லாமல், முறையான தேர்தல் வழக்காகவோ அல்லது அதற்குரிய மாற்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்காகவோ தாக்கல் செய்தால், நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்ற தொனியும் நீதிபதிகளின் வாதத்தில் இருந்து வெளிப்பட்டது.

ஏற்கனவே இந்த குதிரைபேர விவகாரம் தொடர்பாகச் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள இந்த முக்கிய உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குதிரைபேர வழக்கின் பின்னணி:

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான முழு பெரும்பான்மை எண்ணிக்கையான 118 இடங்களைப் பெற முடியாமல், 108 இடங்களை மட்டுமே பெற்றது. முழுமையான பெரும்பான்மை கிடைக்காத இந்தச் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது. அத்துடன் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் ஒரு பிரிவினரும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

இந்த வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்களும், எதிராக 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, மாற்றுக்கட்சி உறுப்பினர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் குதிரைபேரம் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த விசாரணை முடியும் வரை தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us