ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்.. போக்குவரத்துக்கு தடை.. மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
Ooty Tourist Spots Closed : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் 2025 மே 29ஆம் தேதியான இன்று மூடப்பட்டுள்ளது. மேலும், கூடலூர் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி, மே 29 : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் (Nilgiri red alert) விடுக்கப்பட்டுள்ளதால், உதகையில் (Ooty Tourist Spots Closed) உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு 2025 மே 29ஆம் தேதியான இன்று மூடப்படுகிறது. உதகையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நிலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உதகை உள்ளிட்ட இடங்களில் பேய் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கோடை விடுமுறை என்பதால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்
அங்கிருக்கு இயற்கை சூழலை பார்ப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்துள்ளனர். இதற்கிடையில், நீலகிரிக்க ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுடம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கேவை ஆகிய மாவட்டங்களுக்கு 2025 மே 29,30ஆம் தேதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் 2025 மே 29ஆம் தேதியான இன்று மூடப்படுகிறது.




அதோடு, உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. உதகையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
அச்சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. மேலும், உதகை – கூடலூர் சாலையில் பகலில் மட்டுமே பேருந்துகளுக்கு அனுமதி என்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், கனமழையால் தேனியில் உள்ள சுருளி நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், கன்னியாகுமரி சுற்றுலா தலத்திலும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நீலகிரிக்கு ரெட் அலர்ட்
2025 மே 24ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 2025 மே 28ஆம் தேதி நேற்று தென் மாநிலங்கள் மூலம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் கூறியது. இதற்கிடையிலேயே, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 2025 மே 29,30ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 2025 ஜூன் 3ஆம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.