AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? அதிமுக ஐ.டி விங்..

AIADMK IT WING: ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே... எதுல? மக்களை ஏமாற்றுவதில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதில். அதுல நீங்க திமுகவை மிஞ்சிதான் இருப்பீங்க போல! எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? அதிமுக ஐ.டி விங்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jun 2026 22:23 PM IST

திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் சிறப்புரையாற்றியிருந்தார்.  அப்போது, “தீய சக்தி”, “தீஞ்சு போன சக்தி” என அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நீங்க கோட் போடுங்க… போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுற்றிதான் இயங்குற மாதிரி சும்மா நச நசன்னு புலம்பிட்டு இருக்காதீங்க” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறுக்கு பொறுப்பேற்க மனமில்லா அரசு:

இது தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டதாவது: “NARCISSISTIC SPEECH! இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இதுதான். தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா? என்னய்யா புது உருட்டா இருக்கு இதெல்லாம்?

இது Narcissism இல்லாமல் வேறென்ன?

இவர் மீது பழி போடுகிறார்களாம். தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே… இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை அல்லது வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்பு தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?

‘எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சிதான் காரணம்’ என்று சொல்வது பெயர்தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதிநிலை மோசமாக இருந்ததை இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா?  இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?

கத்தி பேசுனா, ‘கத்தி’ பட டயலாக் modulation-ல் பேசுனா, பொய்யெல்லாம் உண்மையாகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா?

மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே தவெக நடத்தத் தொடங்கிய குதிரைப் பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1.

திமுகவை மிஞ்சும் பொய் வாக்குறுதி:

இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி, விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை?

எங்களை ‘மற்றும் பலர்’ என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?

ஆனா ஒண்ணு… ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே… எதுல? மக்களை ஏமாற்றுவதில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதில். அதுல நீங்க திமுகவை மிஞ்சிதான் இருப்பீங்க போல! எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us