AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

மேலும், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என விமர்சித்தார்.

சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2026 12:45 PM IST

ஜூன் 18, 2026: தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால், ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுநர் உரை மற்றும் இன்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் அடிப்படையிலேயே ஆளுநர் உரை அமைந்துள்ளது.

ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லை – எடப்பாடி பழனிசாமி:

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்களோ, புதிய அறிவிப்புகளோ இடம்பெறவில்லை. புதிய அறிவிப்புகள் வெளியாகும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், இந்த உரை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.

மேலும், “சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட தற்போது போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற 38 நாட்களுக்குள் 17 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 130 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மாற்றம்.. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய சாதனை!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்து வீர வசனம் பேசியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர். ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால், அந்த அமைப்பிற்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது” என்றும் கூறினார்.

விவசாயிகளை ஏமாற்றும் வேலை:

விவசாயிகள் குறித்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பு ரூ.50,000 வரை விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறினர். தற்போது அதை ரூ.75,000 என உயர்த்தி அறிவித்துள்ளனர். எனவே, விவசாயிகளை ஏமாற்றும் வேலையில்தான் தமிழக வெற்றிக் கழக அரசு ஈடுபட்டு வருகிறது” என்றார்.

மேலும், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என விமர்சித்தார்.

அதேபோல், “கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை எதுவும் இடம்பெறவில்லை” என்றார்.

மின்வெட்டால் மக்கள் கடும் அவதி:

இறுதியாக, “தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் இரவில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசு மின்வெட்டுக்கு அணில்தான் காரணம் என கூறியது. தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு, ‘பியூஸ் கேரியர்’ திருட்டுதான் காரணம் என கூறி வருகிறது” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Follow Us