Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

சிறுவன் கடத்தல் வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!

Minor Abduction Case ADGP Jayaram Arrest : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ய தமிழக காவல்துறை பரிந்துரைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஜெயராம் 2025 ஜூன் 16ஆம் தேதியான நேற்று நீதிமன்றத்திலேயே கைதானார்.

சிறுவன் கடத்தல் வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!
ஏடிஜிபி ஜெயராம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 11:34 AM

சென்னை, ஜூன் 17 : சிறுவன் கடத்தல் வழக்கில் (Minor Abduction Case) கைதான ஏடிஜிபி ஜெயராம் (ADGP Jayaram) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ய தமிழக காவல்துறை பரிந்துரைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஜெயராம் 2025 ஜூன் 16ஆம் தேதியான நேற்று கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஜயஸ்ரீயை  காதலித்து  பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்த்து தெரிவித்திருந்தனர். இதனால், பெண் விஜயஸ்ரீயை தேடி, இளைஞர் தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சிறுவன் கடத்தல் வழக்கு

அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு வரை வைத்து, பேருந்து நிறுத்தம் ஒன்றில் விட்டுச் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக, தனுஷின் தாயார் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான  பூவை ஜெகன்மூர்த்தி  மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தலில் ஈடுபட்டதாக  விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர்  ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்யப்பட்டது. கடத்தலில் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறி பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் 2025 ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது, இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது, விசாரணையின்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த கடத்தல் வழக்கில் காவல்துறை ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார்.

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சரத்குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் என கூறினார். இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை அடுத்து, ஆஜரான ஜெயராமை நீதிமன்றத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலத்தில் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கைதான ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் புகார் குறித்து சென்றதாகவும், இதில் பிரச்னை ஜெயராம் மூலம் பூவை ஜெகன்மூர்த்தியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கூட்டாளிகள் இரு கார்களில் திருமணம் செய்த கொண்ட இளைஞரை கடத்த சென்றுள்ளனர். அங்கு, அந்த இளைஞர் இல்லாததால், அவரது தம்பியை கடத்தியுள்ளனர். ஏடிஜிபியின் காரின் சிறுவனை கொண்டு சென்று இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் கைதானார்.

ராமநாதசுவாமி கோவிலில் பரபரப்பு: 500 பேர் திரண்டு போராட்டம்...
ராமநாதசுவாமி கோவிலில் பரபரப்பு: 500 பேர் திரண்டு போராட்டம்......
4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. ஏன் தெரியுமா..?
4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. ஏன் தெரியுமா..?...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியான 3டி படம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியான 3டி படம்..!...
ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி
ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி...
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை... அப்டேட் இதோ
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை... அப்டேட் இதோ...
வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!
வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!...
தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?
தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது......
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு...
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?...
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு...