AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எத்தியோப்பியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் உலக தலைவர்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி..

PM Modi Visit To Ethiopia: எத்தியோப்பியாவின் இந்த உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 28வது உயரிய வெளிநாட்டு விருதாகும். பிரதமர் மோடி டிசம்பர் 16 எத்தியோப்பியாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். "எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான 'கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் உலக தலைவர்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Dec 2025 08:32 AM IST

டிசம்பர் 17, 2025: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த விருதான தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் உலகளாவிய அரசுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது அலி இந்த விருதை வழங்கினார். எத்தியோப்பியாவின் இந்த உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 28வது உயரிய வெளிநாட்டு விருதாகும். பிரதமர் மோடி டிசம்பர் 16 எத்தியோப்பியாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.

“எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருது பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது மோடியின் ராஜதந்திரத்திற்கு ஒரு வெளிநாட்டு நாடு வழங்கும் 28வது பாராட்டு ஆகும், இது அவரது தலைமையின் கீழ் உலகளாவிய ராஜதந்திரத்தில் இந்தியாவின் உயரும் அந்தஸ்தை குறிக்கிறது.”

உலகெங்கிலும் இருக்கும் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும்:

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருது வழங்கப்படுவது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம். உலகளாவிய தெற்கிற்கான பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இந்தியா – எத்தியோப்பியா நட்பை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கான அங்கீகாரம்’ என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி.. இரு நாட்டு உறவு வலுவடையும் என நம்பிக்கை..

பிரதமர் மோடிக்கு 28வது சர்வதேச விருது கிடைத்திருப்பது, இந்தியாவின் உயர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தையும், உலக அரங்கில் அவரது மரியாதைக்குரிய தலைமையையும் பிரதிபலிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

மிகுந்த பெருமைக்குரிய விஷயம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி:


இந்த விருதைப் பெறுவது தனக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி கூறினார். “இப்போதுதான், நாட்டின் மிக உயர்ந்த விருதான தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியாவை எனக்கு வழங்கியுள்ளது. உலகின் மிகவும் பழமையான மற்றும் வளமான நாகரிகத்தால் கௌரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது நமது கூட்டாண்மையை வடிவமைத்த ஏராளமான இந்தியர்களுக்கு உரியது” என்று அவர் கூறினார்.

“இந்தச் சந்தர்ப்பத்தில், எனது நண்பர் பிரதமர் அபி அகமது அலிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது நாங்கள் சந்தித்தபோது, ​​மிகுந்த அன்புடனும் உரிமையுடனும், எத்தியோப்பியாவுக்குச் செல்லுமாறு நீங்கள் என்னை வற்புறுத்தியீர்கள். என் நண்பர், என் சகோதரரின் இந்த அழைப்பை நான் எப்படி நிராகரித்திருக்க முடியும்? எனவே, முதல் சந்தர்ப்பத்திலேயே, நான் எத்தியோப்பியாவுக்கு வர முடிவு செய்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கும் பிரதமர் அர்ப்பணித்தார். “எத்தியோப்பியாவின் நிஷான் என்ற மாபெரும் விருதைப் பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன்! இதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்,” என்று அவர் X இல் ஒரு பதிவில் கூறினார்.

 

Follow Us