Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ADGP Jayaram’s Arrest: 16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!

Teen Abduction Case: சென்னை உயர் நீதிமன்றம், 16 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தலுக்கு அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும், ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ADGP Jayaram’s Arrest: 16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!
ஏடிஜிபி ஜெயராம் - பூவை ஜெகன் மூர்த்தி
mukesh-kannan
Mukesh Kannan | Published: 16 Jun 2025 19:06 PM

சென்னை, ஜூன் 16: 16 வயது சிறுவனை கடத்திய வழக்கில் கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதாவது 2025 ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சிறுவன் கடத்தல் வாக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராம் (Additional Director General of Police HM Jayaram) கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு அரசு வாகனத்தை ஜெயராம் பயன்படுத்தியதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவித்தப்பட்டது. மேலும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி (KV Kuppam MLA, Poovai Jagan Moorthy), விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

வழக்கு விவரம்:

தேனியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரும் கலப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதி ஆன்லைனில் சந்தித்து, கடந்த 2025 மே மாதம் தங்கள் திருமணத்தை பதிவு செய்து, பெண்ணின் பெற்றோருக்கு பயந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை உட்பட ஒரு கும்பல், ஏடிஜிபியின் காரில், திருமணம் செய்துகொண்ட இளைஞரின் தம்பியான 16 வயது சிறுவனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தாயார் காவல்துறை உதவி எண்ணை தொடர்புகொண்டு புகாரளித்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராக உத்தரவு:

விசாரணையின் சிறுவனை கடத்திய நபர்கள், தற்போதைய கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரின் ஆட்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, 2025 ஜூன் 16ம் தேதியான இன்று பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஜெயராமைக் கைது செய்ய உத்தரவிட்டு, மூர்த்தியை காவல்துறை முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 2025 ஜூன் 26ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிமன்றம் எச்சரிக்கை:

அடுத்ததாக, பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன், “200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம், நீதிமன்றம் நினைத்தால் இன்று அதாவது ஜூன் 16ம் தேதி காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் நீங்கள் தனியாகத்தான் போக வேண்டும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள்” என்று எச்சரித்தார்.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...