அந்த வகையில், ஜனவரி 9, 2026 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
அதேபோல், ஜனவரி 10, 2026 அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 11, 2026 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கொள்ளிடம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிதான ஒரு நிகழ்வு – வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், தற்போது வரக்கூடிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடித்து இருக்கும். 2025 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 அன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் இறுதி வரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு அளவிலான ஏற்றத் தாழ்வுகளுடன் வடகிழக்கு பருவமழை பதிவானது. இந்தச் சூழலில், வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து, தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இது அரிதான ஒரு நிகழ்வு என வானிலை ஆய்வு மையம் தரப்பு தெரிவித்துள்ளது.