AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்.. காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. வைரலாகும் காட்சி..

40 வாகனங்கள் இன்று ஒப்படைக்கப்பட்ட சூழலில், அதில் இருந்த ஒரு வாகனத்தை முதலமைச்சர் தானே ஓட்டி, அதன் இயக்கம் மற்றும் நிலைமை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வு திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும், வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, சாவிகளை ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதே நடைமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்.. காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. வைரலாகும் காட்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 May 2026 12:24 PM IST

மே 20, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சுமார் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார். 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், வாகனங்களின் திறன் மற்றும் இயக்கத்தை பரிசோதிக்கும் வகையில் அங்கு இருந்த ஒரு வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு தானே ஓட்டி சோதனை செய்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வாகனத்தை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்:

இந்த வாகனங்கள் அனைத்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டவையாகும். பொதுவாக முதலமைச்சர் வாகனங்களை வழங்கும் முன்பு அதன் செயல்திறன் மற்றும் இயக்கத்தை சோதனை செய்வது வழக்கமாக இருந்தாலும், நேரடியாக வாகனத்தை ஓட்டி பார்ப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

40 வாகனங்கள் இன்று ஒப்படைக்கப்பட்ட சூழலில், அதில் இருந்த ஒரு வாகனத்தை முதலமைச்சர் தானே ஓட்டி, அதன் இயக்கம் மற்றும் நிலைமை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வு திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும், வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, சாவிகளை ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதே நடைமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: “அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் பங்குபெற வேண்டும்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!

ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்:

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில், மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் ஸ்கேன் மையங்களில், கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலினத் தேர்வு தடைச் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம், 1997 ஆகியவற்றின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிக்காக இந்த புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவமனைகள் முறையான பதிவு பெற்று செயல்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ளவும், பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்த வாகனங்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டெண்டரில் முறைகேடு.. இணையத்தில் வெடித்த சர்ச்சை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

அதேபோல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், போலி மருத்துவர்களுக்கு எதிராக விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Follow Us