AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: அமெரிக்க வீரருக்கு தடை.. போன் போட்ட டிரம்ப்.. விளையாட ஃபிஃபா அனுமதித்ததால் சர்ச்சை!

USA President Donald Trump Phone Call: ஃபிஃபா தலைவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, ​​பலோகுனின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, ஃபிஃபா பலோகுனின் சிவப்பு அட்டையை ரத்து செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FIFA World Cup 2026: அமெரிக்க வீரருக்கு தடை.. போன் போட்ட டிரம்ப்.. விளையாட ஃபிஃபா அனுமதித்ததால் சர்ச்சை!
அமெரிக்க கால்பந்து வீரர் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்Image Source: Fabrizio Romano/ X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Jul 2026 17:57 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். அதேநேரத்தில், தோற்கும் அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்படும். இந்தச் சூழ்நிலையில், ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெல்ஜியம், அமெரிக்காவை (USA Football Team) எதிர்கொள்கிறது. ஆனால் இந்தப் போட்டிக்கு முன்பே ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலரின் பலோகன் மீதான தடையை நீக்கியதற்கு பெல்ஜியம் கால்பந்து நிர்வாகம்  தங்களை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தடை நீக்கப்பட்டதால், பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இது பெல்ஜியம் கால்பந்து அணியை கோபப்படுத்தியுள்ளது.

ALSO READ: ஓய்வை அறிவித்தார் நெய்மர்! ஃபிஃபா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பிரேசில்..

ஃபிஃபாவின் இந்த முடிவுக்குப் பிறகு, ஃபிஃபா டிரம்புக்குப் பணிந்துவிட்டதாக பெல்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது. கிடைத்த தகவலின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க வீரர் பலோகன் மீதான தடையை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

டிரம்பின் போன் கால்:

ஃபிஃபா தலைவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, ​​பலோகுனின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, ஃபிஃபா பலோகுனின் சிவப்பு அட்டையை ரத்து செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலோகுனின் இடைநீக்கம் ஓராண்டுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பலோகுன் மீண்டும் தவறு செய்தால், மன்னிப்பு எதுவும் வழங்கப்படாமல் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்ய ஃபிஃபாவின் நீதித்துறை அமைப்புக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் ஃபிஃபாவுக்கு நன்றி:


அமெரிக்க கால்பந்து வீரர் பலோகன் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபிஃபாவுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில், “சரியானதைச் செய்து, ஒரு பெரும் அநீதியைச் சரிசெய்த ஃபிஃபாவுக்கு நன்றி” என்று எழுதினார்.

ALSO READ: கோல்டன் பூட் விருதுக்காக கடும் போட்டி.. கோல் மழை பொழியும் மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட்!

FIFA வெட்கப்பட வேண்டும் – பெல்ஜியம்

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் ஃபோலரின் பலோகனுக்கு ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. எனவே, அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்பது தெளிவாகியது. ஆனால், பலோகனின் தடை நீக்கப்பட்ட பிறகு, பெல்ஜிய அரசியல்வாதிகளும் கால்பந்து அதிகாரிகளும் ஃபிஃபாவை விமர்சித்தனர். இந்த முடிவு வெட்கக்கேடானது என்றும், உலகக் கோப்பையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி, இந்திய நேரப்படி 2026 ஜூலை 7ம் தேதி காலை 5:30 மணிக்கு நடைபெறும்.

Follow Us