FIFA World Cup 2026: இந்த உலகக் கோப்பையுடன் ரொனால்டோவும் ஓய்வு.. சோகத்தில் கால்பந்து ரசிகர்கள்!
Cristiano Ronaldo Retirement: போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவே தனது 6வது மற்றும் கடைசி ஃபிஃபா உலகக் கோப்பை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரொனால்டோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரொனால்டோ பத்திரிகையாளர்களை எதிர்கொண்டபோது, அர்ஜென்டினா பத்திரிகையாளர் ஒருவருடனான கேலிப் பேச்சும் இடம்பெற்றது.
ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) பிரேசிலிய கால்பந்து நட்சத்திரமான நெய்மர் ஜூனியர் (Neymar JR), சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நார்வேயிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, நெய்மர் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். தனது கடைசிப் போட்டியில் நெய்மர் ஒரு கோல் அடித்தபோதிலும், பிரேசில் அணியால் வெற்றியை பெற முடியவில்லை. பிரேசில் அணி முழுமையாக அபாரத் திறமைசாலியாக இருந்தபோதிலும், நெய்மர் தனது வாழ்நாளில் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு அதிர்ச்சி அவர்களைத் தாக்கியது. கால்பந்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வரும் அதிர்ச்சிகளை ஜீரணிப்பது சற்று கடினமாக இருக்கப்போகிறது.
ALSO READ: ஓய்வை அறிவித்தார் நெய்மர்! ஃபிஃபா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பிரேசில்..
ரொனால்டோ ஓய்வு அறிவிப்பு:
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவே தனது 6வது மற்றும் கடைசி ஃபிஃபா உலகக் கோப்பை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரொனால்டோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரொனால்டோ பத்திரிகையாளர்களை எதிர்கொண்டபோது, அர்ஜென்டினா பத்திரிகையாளர் ஒருவருடனான கேலிப் பேச்சும் இடம்பெற்றது. ஸ்பெயினுக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, “மக்களின் அன்பும், அவர்களுடன் நான் கொண்டிருக்கும் நினைவுகளுமே எனது மிகப்பெரிய சொத்துக்கள். அணி ஊழியர்களுடனும், ஹோட்டலில் இருந்த லத்தீன் அமெரிக்கர்களுடனும் கழித்த தருணங்கள் எனது இனிய நினைவுகளில் அடங்கும். நேற்று, விமானத்தில் ஒரு அர்ஜென்டினா விமானப் பணிப்பெண்ணைச் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்த விதத்திலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டேன். அவரிடம், ‘நீங்கள் என்னைப் பார்க்கும் விதத்தைப் பார்த்தாலே, நீங்கள் ஒரு அர்ஜென்டினாக்காரர் என்று எனக்குத் தெரியும்’ என்றேன். யாராவது என்னைப் பார்த்தவுடனேயே பார்வையைத் திருப்பிக்கொண்டால், அவர்களுக்கு கிறிஸ்டியானோவைப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும்” என்றார்.




ALSO READ: ஒலிபெருக்கிகள்.. வாணவேடிக்கைகள்..! இங்கிலாந்து வீரர்களுக்கு தொல்லை தரும் மெக்சிகோ ரசிகர்கள்!
ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பேன்..
தொடர்ந்து பேசிய ரொனால்டோ, “எனது கடைசி உலகக் கோப்பையின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவிக்க விரும்புகிறேன். நாளை எனது கடைசிப் போட்டியாக இருக்காது என்று நம்புகிறேன், அப்போதுதான் நீங்கள் இன்னும் சில நாட்களுக்கு என்னை விமர்சித்துக் கொண்டே இருக்க முடியும். என் வாழ்க்கையில் எனக்கு எந்தக் குறையும் இல்லை. கடவுள் எனக்கு மிகவும் கருணை காட்டியுள்ளார். நான் கற்பனை செய்து பார்த்த அனைத்தையும், குறிப்பாக தேசிய அணியைப் பொறுத்தவரை, அவர் எனக்குக் கொடுத்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் எல்லாவற்றையும் பெற்றுள்ளேன். எனவே இப்போது நான் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன். உலகக் கோப்பையை வெல்வதோ வெல்லாததோ என்னை பெரியவனாகவோ சிறியவனாகவோ ஆக்காது.” என்றார்.