Team India: விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. குல்தீப் மீது கோபம் ஏன்..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
Suryakumar Yadav on Kuldeep Yadav: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயற்சிக்காததால் சூர்யகுமார் யாதவ் அதிருப்தி அடைந்ததாகவும், ஹர்திக் பாண்டியாவும் குல்தீப் யாதவ் மீது கோபப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) , டி20 உலகக் கோப்பையின் போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி விவரித்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நடத்திய ஒரு நேர்காணலில், குல்தீப் யாதவுடன் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சூர்யகுமார் யாதவ் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (IND vs PAK) இடையிலான எந்தவொரு போட்டியும் இரு அணிகளுக்கும் மற்றும் இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முக்கியமானதாகும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் ஏன் கோபப்பட்டார் என்பதை சூர்யகுமார் யாதவ் நினைவு கூர்ந்தார். மேலும், சூர்யகுமார் யாதவ் ஏன் குல்தீப் யாதவ் மீது கோபமாக இருந்தார் என்பதும் தெளிவாகியது. அந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 77 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
சூர்யகுமார் யாதவ் ஏன் குல்தீப் மீது கோபமாக இருந்தார்?
🚨 Suryakumar Yadav reveals unseen side of viral Kuldeep Yadav incident from T20 World Cup: ‘I got angry’ pic.twitter.com/Lc5gZgUo0K
— India Live (@IndiaLiveIN) August 30, 2026
குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயற்சிக்காததால் சூர்யகுமார் யாதவ் அதிருப்தி அடைந்ததாகவும், ஹர்திக் பாண்டியாவும் குல்தீப் யாதவ் மீது கோபப்பட்டார் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “போட்டி தொடங்கியபோது, குல்தீப் யாதவுக்குப் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை வழங்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் சற்று வருத்தத்தில் இருந்தார். நான் அக்சர் பட்டேலின் பந்துவீச்சை முடித்தேன், பின்னர் திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்து வீசினர். குல்தீப் யாதவ், ‘எனது நேரம் ஏன் வரவில்லை?’ என்று கேட்டார். அதன்பிறகு, குல்தீப் யாதவ் லாங் ஆனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் கேட்ச் பிடித்திருக்கலாம். அவரது திறமைக்கு அது ஒரு எளிதான கேட்ச்தான்.




ALSO READ: பறிபோன சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமை.. பொன்னான வாய்ப்பை மிஸ் செய்த இலங்கை!
குல்தீப் யாதவ் முயற்சி செய்து கேட்சைத் தவறவிட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் அவர் அவ்வளவு கடுமையாக முயற்சிக்கவில்லை. தொலைக்காட்சியில் எனக்கும் குல்தீப் யாதவிற்கும் இடையில் நான் கண்ட அந்த வாக்குவாதம் உண்மையில் இல்லை. அதைத் திரையில் பார்த்த பிறகு, அது ஒரு நகைச்சுவை என்று நான் நினைத்தேன். பின்னர் அகமதாபாத்தில் ஒரு ரீலை உருவாக்கி, சூழ்நிலையை இலகுவாக்க முயன்றோம்” என்று தெரிவித்தார்.