AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. சிக்ஸர் மழை பொழிந்த சிராஜ்.. இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி!

Siraj Batting: கொழும்பில் இலங்கை XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் 3வது மற்றும் இறுதி நாளில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் பின்தங்கியிருந்த இந்தியா, வெற்றி பெற 207 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

IND vs SL: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. சிக்ஸர் மழை பொழிந்த சிராஜ்.. இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி!
முகமது சிராஜ்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Aug 2026 19:44 PM IST

இந்திய அணியின் (Indian Cricket Team) வெற்றிக்காக முகமது சிராஜ் பலமுறை பந்துவீச்சில் அசத்தியுள்ளார். ஆனால் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 9ம் தேதி சிராஜ் தனது அதிரடி பேட்டிங்கால் இலங்கை லெவன் அணிக்கு எதிராக இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இதன்போது, சிராஜின் பேட்டிங்கைக் கண்டு இலங்கை அணி வீரர்களே திகைத்துப்போனார்கள். போட்டி முடிந்த பிறகு, அவர்களது வீரர்கள் சிராஜின் பேட்டை எடுத்து சோதிக்க தொடங்கினர். கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து போட்டியை வென்று கொடுத்தார்.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியை துரத்தும் காயங்கள்.. அதிகாரிகள் அவசர மீட்டிங்.. அடுத்து என்ன நடக்கும்?

கொழும்பில் இலங்கை XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் 3வது மற்றும் இறுதி நாளில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் பின்தங்கியிருந்த இந்தியா, வெற்றி பெற 207 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்தியா வெற்றியை நோக்கிச் செல்வது போல் தோன்றியது. ஆனால் கடைசி நிமிடத்தில், போட்டி சமனில் முடியக்கூடும் எனத் தெரிந்தது. இன்னும் 1 ஓவர் மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது முகமது சிராஜ் பேட்டிங்கால் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.

அன்றைய போட்டியின் கடைசி ஓவரை நுவந்தா வீசினார். முதல் பந்தில் சிராஜ் காலை எடுத்துவிட்டு, கௌ கார்னர் திசையில் ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார். இரண்டாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லென்த்தில் வந்தது. அதிலும், சிராஜ் ஒரு சிக்ஸரை அடித்தார். 3வது பந்தை மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸருக்கு விளாசினார். இதன் மூலம், இந்தியா இந்தப் பயிற்சிப் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டை சரி பார்த்த இலங்கை வீரர்கள்:


போட்டி முடிந்த பிறகு, முகமது சிராஜ் இலங்கை வீரர்களுடன் கைகுலுக்கச் சென்றபோது, ​​அவர்கள் சிராஜின் பேட்டை எடுத்து வேடிக்கையாக அதை ஆராயத் தொடங்கினர். அவர் ஒரு சரியான பேட்ஸ்மேனைப் போல ஷாட்களை அடித்ததால், அவரது பேட்லிருந்து வெளிப்பட்ட சக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இந்த இன்னிங்ஸில் முகமது சிராஜ் 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 32 ரன்கள் எடுத்தார். முன்னதாக, இரண்டாம் நாளின் கடைசி ஓவரில் குர்னூர் பிரார் இதேபோல் பேட் செய்திருந்தார்.

ALSO READ: திரும்பிய சுப்மன் கில்.. சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்திய இந்தியா..!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி எப்போது?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 23ம் தேதி சிங்கள விளையாட்டு மன்ற ஸ்டேடியத்தில் தொடங்கும். இரு போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்குத் தொடங்கும்.

Follow Us