Team India: ஆப்கானிஸ்தான் டெஸ்ட்க்குமுன் அதிரடி.. இந்திய அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்!
Sairaj Bahutule: ஒரு சிறந்த வீரராக இருப்பதையும் தாண்டி, சாய்ராஜ் பாஹுதுலே இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் பயிற்சியாளர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயிற்சி அனுபவமானது உள்நாட்டு, இடைநிலை மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை உள்ளடக்கியது. விதர்பா, கேரளா, குஜராத் மற்றும் பெங்கால் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய காலங்களும் இதில் அடங்கும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) புதிய சுழற்பந்து பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலேவை நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சாய்ராஜ் பஹுதுலே இந்தப் பொறுப்பை ஏற்க இருக்கிறார். முன்னாள் இந்திய சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான சாய்ராஜ் பஹுதுலே, பல ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சுத் திறமைகளை வளர்ப்பதில் பணியாற்றிய அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். மேலும், பல இளம் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களாக உருவெடுப்பதற்கும் காரணமாக இருந்துள்ளதால், பிசிசிஐ முக்கிய பதவியை சாய்ராஜ் பஹுதுலேக்கு கொடுத்துள்ளது.
ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டி.. சொந்த மண்ணில் விருந்தினராக விளையாடப்போகும் இந்திய அணி!




யார் இந்த சாய்ராஜ் பஹுதுலே..?
🚨 News 🚨
BCCI appoints Sairaj Bahutule as India’s Spin Bowling Coach.
More Details 🔽 | #TeamIndiahttps://t.co/DYgHNIX7E5
— BCCI (@BCCI) June 2, 2026
சாய்ராஜ் பாஹுதுலே இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகளிலும் 8 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் சாய்ராஜ் பாஹுதுலே ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், ஒரு அற்புதமான பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார். முதல் தர கிரிக்கெட்டில் சாய்ராஜ் பாஹுதுலே 6176 ரன்கள் எடுத்ததோடு, 630 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், சாய்ராஜ் பாஹுதுலே உள்ளூர் கிரிக்கெட்டின் ஒரு ஜாம்பவானாகக் கருதப்பட்டார்.
பயிற்சியாளராக சாய்ராஜ் பாஹுதுலே செயல்திறன்:
ஒரு சிறந்த வீரராக இருப்பதையும் தாண்டி, சாய்ராஜ் பாஹுதுலே இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் பயிற்சியாளர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயிற்சி அனுபவமானது உள்நாட்டு, இடைநிலை மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை உள்ளடக்கியது. விதர்பா, கேரளா, குஜராத் மற்றும் பெங்கால் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய காலங்களும் இதில் அடங்கும். மேலும், சாய்ராஜ் பாஹுதுலே ஐபிஎல் அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகியவற்றின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ALSO READ: அடுத்தடுத்து சர்வதேச போட்டி.. எந்தெந்த மாதங்களில் எந்த அணியை இந்தியா எதிர்கொள்ளும்?
சாய்ராஜ் பாஹுதுலே கூறியது என்ன..?
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு சாய்ராஜ் பாஹுதுலே கூறுகையில், “இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கௌரவம். ஒரு வீரராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இப்போது, பயிற்சியின் மூலம் மீண்டும் இந்திய கிரிக்கெட்டிற்குப் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும், அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்க அணிக்கு ஆதரவளிப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்தார்.