IPL 2026: கோபத்தில் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. பிசிசிஐ அபராதம் விதிப்பு..!
Hardik Pandya Fined: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இன்னிங்ஸின் 10வது ஓவரின்போது ஹர்திக் பாண்ட்யா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 4வது பந்தில், ரன்-அப்பிற்குத் திரும்பும்போது, ஹர்திக் பாண்ட்யா பெயில்ஸைத் தட்டிவிட்டுத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தவறுக்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் தோல்வியை மட்டுமல்லாது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொரு பிரச்சனையையும் சந்தித்தார். ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) தோற்றது மட்டுமல்லாமல், போட்டியின் போது செய்த ஒரு பெரிய தவறுக்காக அவர் பிசிசிஐ-யின் நடவடிக்கையையும் எதிர்கொண்டார். தண்டனையாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டனுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. இதில் அவரது போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கப்பட்டது.
ALSO READ: மும்பையை வீழ்த்திய கொல்கத்தா.. பிளே ஆஃப் சென்றதா ரஹானே படை..?




ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது?
🚨BIG: ACTION ON HARDIK PANDYA 🚨
🔸Hardik Pandya has been fined 10% of his match fee and accumulated one Demerit Point for breaching Article 2.2 of IPL’s Code of Conduct.
🔸The incident during KKR’s chase, when Pandya, walking back to his run-up, knocked the bails of the… pic.twitter.com/3df6lpWXhW
— Indian Cricket (@IPL2025Auction) May 21, 2026
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இன்னிங்ஸின் 10வது ஓவரின்போது ஹர்திக் பாண்ட்யா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 4வது பந்தில், ரன்-அப்பிற்குத் திரும்பும்போது, ஹர்திக் பாண்ட்யா பெயில்ஸைத் தட்டிவிட்டுத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தவறுக்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது தனது செயல்களுக்காக, ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் தண்டனை நிரூபிக்கப்பட்டது. அவர் தனது தவறை போட்டி நடுவர் ராஜீவ் சேத்திடம் ஒப்புக்கொண்டார்.
கொல்கத்தா எதிரான ஹர்திக் பாண்ட்யா ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது அணியின் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். இருப்பினும், அவரது ஆட்டம் மிகவும் மெதுவாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 2 ஓவர்களில் 13 ரன்களை விட்டுக்கொடுத்த பாண்டியா, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
ALSO READ: பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்.. குஜராத் கோட்டை.. சிஎஸ்கே தாக்கு பிடிக்குமா?
ஐபிஎல் 2026-ல் ஹர்திக் பாண்டியா செயல்திறன்:
ஐபிஎல் 2026 தொடரில் ஹர்திக் பாண்டியா தனது ஒன்பதாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அவரது கேப்டன்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 9 போட்டிகளில் பாண்டியா 172 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.