AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs AUS W: மழையின் காரணமாக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு தடையா..? அரையிறுதிக்கு யார் செல்வார்கள்?

ICC Womens T20 World Cup Semifinal Scenario: ஆஸ்திரேலியா ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவைப் போலவே 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.

IND W vs AUS W: மழையின் காரணமாக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு தடையா..? அரையிறுதிக்கு யார் செல்வார்கள்?
இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2026 17:47 PM IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் (ICC Womens T20 World Cup 2026) இந்திய அணி இன்று அதாவது 2026 ஜூன் 28ம் தேதி கடுமையான போட்டியில் விளையாட உள்ளது. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் 5வது மற்றும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை (IND W vs AUS W) எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகளுக்கு செல்ல வேண்டுமெனில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். ‘பி’ குழுவிலிருந்து இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும், ‘ஏ’ குழுவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

ALSO READ: தோல்வியே காணாத ஆஸ்திரேலிய மகளிர்.. விரட்டியடிக்குமா இந்திய மகளிர்..? ஹெட் டூ ஹெட் விவரம்!

‘ஏ’ பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதிபெறும் இரண்டு அணிகளில் நிலைமையும் இன்று அதாவது 2026 ஜூன் 28ம் தேதி தீர்மானிக்கப்படும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இந்திய அணி யாருடைய தயவுமின்றி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால், பலம் மிக்க ஆஸ்திரேலியாவை எப்படியாவது வென்றாக வேண்டும். எனவே, இந்தப் போட்டி இந்தியாவிற்கு வாழ்வா சாவா போட்டியாகும். இந்தச் சூழலில், மழையின் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்குப் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குழு A-வில் யாருக்கு சாதகம்..?

ஆஸ்திரேலியா ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவைப் போலவே 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், இந்திய அணி தனது சிறந்த நிகர ரன் ரேட்டின் காரணமாக புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும், வங்கதேசம் 4ம் இடத்திலும் உள்ளன. ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். எனவே, அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள 2 இடங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே போட்டி நிலவும்.

எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1-1 புள்ளிகள் வழங்கப்படும். அதன்படி, ஆஸ்திரேலியா 9 புள்ளிகளையும், இந்தியா 7 புள்ளிகளையும் பெறும். இதன்மூலம், ‘ஏ’ பிரிவிலிருந்து 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதிபெறும் முதல் அணியாக ஆஸ்திரேலியா திகழும்.

ALSO READ: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்த 3 வீராங்கனைகள்!

இந்தியாவின் சமன்பாடு

மேலும், தென்னாப்பிரிக்கா தனது கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினால், அவர்களுக்கு 8 புள்ளிகள் கிடைக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, 7 புள்ளிகளுடன் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்துவிசும். இருப்பினும், மழை அல்லது பிற காரணங்களால் போட்டி ரத்து செய்யப்பட்டால், 7 புள்ளிகள் என்ற சமன்பாடு பொருந்தும். மேலும், வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். மேலும், வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்பது முக்கியமானதாக இருக்கும்.

Follow Us