கேஸ் குடோன் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கோவையில் பரபரப்பு!!
தீ பற்றிய குப்பை கிடங்கின் அருகே காஸ் குடோன் பள்ளி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் உள்ளது.இது குறித்து அறிந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் சேகரிப்பதற்காக குப்பை கிடங்கு ஏழாவது வார்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு உப்பிலியர் வீதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வானை நோக்கி தீ மளமளவென பரவி வேகமாக பரவியது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. மேலும் தீ பரவியதன் காரணமாக நகர் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
Follow Us
