டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்… பெண்ணிடம் ரூ.2 கோடி பறித்த இளைஞர் கைது
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். , அவரிடம் இருந்து சுமார் ரூ. 2 கோடி வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளார்.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (36). இவர் அப்பகுதியில் கால்பந்து அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி மூலம் கோவையைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பவைத்த விக்னேஷ்வரன், அவரிடம் இருந்து சுமார் ரூ. 2 கோடி வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளார். மேலும், அவரிடம் இருந்து கார் மற்றும் ஐபேட் போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கி உள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
