IND vs AFG: 48 பந்துகளில் சதம்.. மிரட்டிய குர்பாஸ்.. இந்திய அணிக்கு 195 ரன்கள் மட்டுமே இலக்கு!
IND vs AFG 1st Innings Highlights: ரஹ்மானுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் சதம் அடித்து, ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒட்டுமொத்தப் பட்டியலில் 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஏபி டி வில்லியர்ஸ், 2015-ஆம் ஆண்டு 31 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி, தனது சதத்தை வெறும் 48 பந்துகளில் எட்டினார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்ற குர்பாஸ், ஒட்டுமொத்தப் பட்டியலில் ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்தார்.
ALSO READ: மழையால் தடைப்படும் IND vs AFG ஒருநாள் போட்டி.. 20 ஓவர்களாக நடத்தப்படுமா?
தரம்சாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் டாஸ் தோற்று முதலில் பேட் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. இரண்டாவது ஓவரிலேயே இப்ராஹிம் ஜத்ரான் (1) விக்கெட்டை இழந்து ஆப்கானிஸ்தான் மோசமான தொடக்கத்தைப் பெற்றது. இது, தனது அறிமுகப் போட்டியில் ஆடிய குர்னூர் பிராரின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். பின்னர், செடிகுல்லா அடல் டக் அவுட் ஆனார். நான்காம் வரிசை பேட்ஸ்மேனான ரஹ்மத் ஷா ஜுர்மத் (3) கூட சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு, ரஹ்மானுல்லா குர்பாஸ் இன்னிங்ஸை நிலைப்படுத்தி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16-வது ஓவரின் 3வது பந்தில் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் குர்பாஸின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆப்கானிஸ்தானின் அதிவேக ஒருநாள் சதம்:
Impressive day out in #TeamIndia colours 💙
Harsh Dubey 🤝 Gurnoor Brar
Updates ▶️ https://t.co/lCuohEZYAl #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/4nFkz6efAn
— BCCI (@BCCI) June 13, 2026
ரஹ்மானுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் சதம் அடித்து, ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒட்டுமொத்தப் பட்டியலில் 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஏபி டி வில்லியர்ஸ், 2015-ஆம் ஆண்டு 31 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்தபோது ஆப்கானிஸ்தான் 15.3 ஓவர்களில் விருந்தினர் அணி 142 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ALSO READ: இந்திய அணிக்காக களம் கண்ட அறிமுக வீரர்கள்.. முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தல்!
கடைசியில் சொதப்பிய ஆப்கானிஸ்தான்..
குர்பாஸ் ஆட்டமிழந்த பிறகு, இந்திய பந்துவீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்து, ஆப்கானிஸ்தான் அணியை 194 ரன்களுக்குள் சுருட்டினர். அறிமுக வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.