IND A vs ENG A: முத்தரப்பு முதல் போட்டியில் முத்திரை.. இலங்கையை வீழ்த்தி இந்தியா ஏ த்ரில் வெற்றி!
IND A vs SL A Highlights: 278 ரன்களைத் துரத்துவதற்காக இலங்கையின் தொடக்க வீரர்களாக நிரோஷன் டிக்வெல்லா (47) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ (45) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் இருவரும் தங்களது அரைசதத்தை எட்டத் தவறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஆயுஷ் படோனி ஆட்டமிழக்கச் செய்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சிறப்பாக விளையாடிய வீரர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய ‘ஏ’ அணி, முத்தரப்புத் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. முன்னதாக, இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட தோற்றுவிடும் என்ற நிலையில் வெற்றி கிடைத்தது. 278 ரன்களைத் துரத்திய இலங்கை, 46 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, இலங்கை ஏ அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இந்திய அணி (Indian Cricket Team) போட்டியில் தோற்றுவிட்டது போல் தோன்றியது. இருப்பினும், கடைசி கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, கைகளிலிருந்து வெற்றியைப் பறித்தனர்.
278 ரன்களைத் துரத்துவதற்காக இலங்கையின் தொடக்க வீரர்களாக நிரோஷன் டிக்வெல்லா (47) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ (45) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் இருவரும் தங்களது அரைசதத்தை எட்டத் தவறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஆயுஷ் படோனி ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர், 3வது இடத்தில் களமிறங்கிய நுவானிடு பெர்னாண்டோவை (8) விப்ராஜ் நிகம் ஆட்டமிழக்கச் செய்தார்.
ALSO READ: மும்பையை அன்ஃபாலோ செய்த சூர்யகுமார் யாதவ்.. ஐபிஎல்லில் வேறு அணிக்கு மாற்றமா?




இந்திய அணிக்கு பயம் காட்டிய கூட்டணி:
அதன்பிறகு, சதீரா சமரவிக்ரமவும் கேப்டன் சஹான் ஆராட்சிகேவும் 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் என்ற முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த நிலையில், சமரவிக்ரம 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 195 ரன்களில், இலங்கையின் 5வது விக்கெட்டாக ரவிந்து பெர்னாண்டோ 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், ஷாமிகா கருணாரத்ன 9 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும், கேப்டன் ஆராட்சிகே 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 72 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஒரு சிறப்பான அரைசதம் அடித்தார். இலங்கையின் 2வது விக்கெட் 262 ரன்களில் வீழ்ந்ததால், இலங்கை வெற்றிபெற 16 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 16 பந்துகளில் இலங்கை 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய ஏ அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி:
இந்திய கேப்டன் திலக் வர்மா டாஸ் வென்று பேட்டிங்கைத் தீர்மானித்தார். பிரப்சிம்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்கினர். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரப் 11 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார், அதே நேரத்தில் வைபவ் சூர்யவன்ஷி 12 பந்துகளில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3வது இடத்தில் களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
ALSO READ: இரவு 11 மணிக்கு இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரா..? முக்கிய முடிவை எடுத்த கிரிக்கெட் வாரியம்!
ருதுராஜ் கெய்க்வாட் சதம்:
முன்னணி வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய பிறகு, ருதுராஜ் கெய்க்வாடும் கேப்டன் திலக் வர்மாவும் இணைந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கெய்க்வாட் 114 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து 101 ரன்கள் எடுத்தார். திலக் 97 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து 60 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆயுஷ் படோனி 18 பந்துகளில் 24 ரன்களும், சூர்யான்ஷ் ஷெட்ஜ் 14 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து இந்தியாவை 277 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை சார்பில், முகமது ஷிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.