IPL 2026: மும்பையுடன் உறவை முறித்துக்கொண்ட ஹர்திக்..? கிடைத்த முக்கிய தகவல்!
Mumbai Indians: ரோஹித் ஷர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை ஏற்ற பிறகு, ஹர்திக் ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த 2 சீசன்களில், ஹர்திக் பாண்ட்யா பல ஸ்டேடியங்களில் கூச்சல்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தநேரத்தில், ஹர்திக் பாண்ட்யா திருமண வாழ்க்கை முறிவுடன் வெளிப்படையாக ஒரு வலிமையான தோற்றத்தைக் காட்டினாலும், உள்ளுக்குள் இவை அனைத்தும் அவரைப் பெரிதும் பாதித்தன.
ஹர்திக் பாண்ட்யாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கும் இடையிலான உறவு முறிவின் விளிம்பை எட்டியுள்ளது. தகவல்களின்படி, 2026 ஐபிஎல் சீசனில் (IPL 2026) ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதால், ஹர்திக் பாண்ட்யா மனதளவில் மிகவும் சோர்வடைந்து, அந்த அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹர்திக் பாண்ட்யாவின் மோசமான ஆட்டத்திறன், அணியின் மீதான அழுத்தம் அதிகரிப்பு மற்றும் கடுமையான விமர்சனங்கள் ஆகியவை காரணமாக ஐபிஎல் 2026 சீசனுக்கு நடுவில் தனது முடிவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
ALSO READ: மும்பை அணியை விட்டு வெளியேறும் ஹர்திக் பாண்டியா? அடுத்த கேப்டன் யாராக இருக்கும்?
2024 சீசன் முதல் கேப்டன்:
2024 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ரோஹித் ஷர்மாவிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றார். இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ், மும்பை அணி தொடர்ந்து எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியது. 2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸின் பயணம் ஏமாற்றமளித்தது. மேலும், லீக் சுற்று முடிவடைவதற்கு முன்பே மும்பை அணி பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. மும்பை இந்தியன்ஸின் பிளேஆஃப் வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிந்த பிறகு, ஹர்திக் பாண்ட்யாவும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே பரஸ்பரப் பிரிவினை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக தெரிகிறது. தற்போது இரு தரப்பினரும் ‘பரஸ்பரப் பிரிவினை’யை நோக்கி நகர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




ஐபிஎல் 2026 சீசனுக்கு நடுப்பகுதியில் ஹர்திக் பாண்ட்யா முதுகு காயத்தாலும் அவதிப்பட்டு வந்தார். ஐபிஎல் வட்டாரம் ஒன்று பிடிஐ-யிடம், “ஹர்திக் பாண்ட்யா மனதளவில் முற்றிலும் சோர்வடைந்திருந்தார். பிளேஆஃப் வாய்ப்புகள் முடிந்தவுடனேயே, அடுத்த ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பதாகாவும் தெரிகிறது” என்று கூறியது.
ரசிகர்களின் கோபத்தை எதிர்கொண்ட ஹர்திக்:
ரோஹித் ஷர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை ஏற்ற பிறகு, ஹர்திக் ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த 2 சீசன்களில், ஹர்திக் பாண்ட்யா பல ஸ்டேடியங்களில் கூச்சல்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தநேரத்தில், ஹர்திக் பாண்ட்யா திருமண வாழ்க்கை முறிவுடன் வெளிப்படையாக ஒரு வலிமையான தோற்றத்தைக் காட்டினாலும், உள்ளுக்குள் இவை அனைத்தும் அவரைப் பெரிதும் பாதித்தன. 2024-ல் அணிக்குத் திரும்பிய பிறகு, 2021-ல் ஹர்திக் பாண்ட்யா பார்த்த ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலையையும் ஹர்திக் பாண்ட்யா காணவில்லை. மும்பை அணியில் உள்ள பல மூத்த வீரர்கள் ஒரே மனநிலையில் இல்லாததும், அணியில் உள்ள அனைவரும் வெவ்வேறு திசைகளில் சிந்திக்கத் தொடங்கும் போது, கேப்டனுக்கு எல்லாவற்றையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாகியது.
ALSO READ: வீரர்கள் ஸ்மார்ட் சன்கிளாஸ் தடை.. பிசிசிஐ அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?
ஹர்திக் அணியை விட்டு வெளியேறினால், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவி விஷயத்தில் ஒரு பெரிய நெருக்கடியை சந்திக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஷி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதற்கிடையில், எதிர்காலத்தைப் பார்க்கும்போது, திலக் வர்மாவை புதிய கேப்டனாக நியமிப்பது குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன.