AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

On This Day 2014: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்டில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி! இந்திய ரசிகர்கள் ஷாக்!

MS Dhoni Test Retirement: மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார். இதில், இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. எம்.எஸ்.தோனியின் தலைமையில் இந்திய அணி டிசம்பர் 2009 இல் முதலிடம் பிடித்து, தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது.

On This Day 2014: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்டில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி! இந்திய ரசிகர்கள் ஷாக்!
எம்.எஸ்.தோனி டெஸ்ட் ஓய்வுImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Dec 2025 17:52 PM IST

டிசம்பர் 30, 2014… சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் (Ind vs Aus) மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது. ஆனால் இந்த டெஸ்டுக்கு பிறகு, மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தனது அவசர மற்றும் அதிரடி முடிவால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதாவது, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் இந்திய கேப்டன் கூல் எம்.எஸ் தோனியின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று எந்தவொரு கிரிக்கெட் ரசிகர்களும் நினைக்கவில்லை. இதன்பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இளம் வீரர் விராட் கோலி பொறுப்பு வழங்கப்பட்டது.

ALSO READ: 14 ஆண்டுகள் காத்திருப்பு.. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி:

டிசம்பர் 30, 2014ம் ஆண்டு நடந்த விஷயங்களை நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி, எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து டிரஸ்ஸிங் ரூமில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “இந்த டெஸ்டுக்குப் பிறகு எம்.எஸ்.தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று யாருக்கும் தெரியாது. உண்மையில், தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கேப்டன் கூல் இறுதி டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெளிவுபடுத்தினார்” என்றார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 6, 2015 அன்று சிட்னியில் நடைபெற திட்டமிடப்பட்டது. எனவே, தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி விராட் கோலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிட்னி டெஸ்டில் தொடங்கி முழுநேர டெஸ்ட் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார். இந்த மாற்றம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது, ஆனால் இந்தியா ஒரு புதிய, ஆக்ரோஷமான கேப்டனைப் பெற்றது. தோனியின் முடிவு அடுத்த தலைமுறைக்கு வழி வகுத்தது.

ALSO READ: 2025ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர்.. டாப் 2வில் இந்திய அணி!

இதுதான் மகேந்திர சிங் தோனியின் டெஸ்ட் வாழ்க்கை:


மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார். இதில், இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. எம்.எஸ்.தோனியின் தலைமையில் இந்திய அணி டிசம்பர் 2009 இல் முதலிடம் பிடித்து, தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது. இதனுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் சகாப்தம் முடிந்துவிட்டது. விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மாறினார். இதற்கிடையில், மகேந்திர சிங் தோனியின் டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 38.09 சராசரியில் 4876 ரன்கள் எடுத்தார். இதில், ஒரு விக்கெட் கீப்பராக தோனி 256 கேட்சுகளையும் 38 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார்.