Team India: இந்திய வீரர்கள் கைகுலுக்காத விவகாரம்.. கபில் தேவ் கொடுத்த ஷாக் பதில்!
Kapil Dev Statement: இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கைகுலுக்க மறுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது அதையும் தாண்டிச் சென்றுவிட்டது. சமீபத்தில் முடிவடைந்த 2026 மகளிர் ஆசியக் கோப்பையில், இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து இந்திய அணி பட்டத்தை வென்றது.
2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) வீரர்கள் போட்டிகளின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை நிறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு முதன்முதலில் 2025 ஆசியக் கோப்பையில் நடந்தது. அப்போது, இந்திய கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் டாஸின் போதும் போட்டிக்குப் பிறகும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தார். இந்த வழக்கம் அப்போதிருந்து தொடர்கிறது. இந்த விவகாரம் குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, முன்னாள் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் (Kapil Dev) இந்த விவகாரம் குறித்து ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விஷயத்தில் அரசின் முடிவிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இந்திய வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கபில் தேவ் கூறியது என்ன..?
இந்தியா டுடேவிடம் பேசிய முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், “பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என அரசு முடிவு செய்திருந்தால், வீரர்களுக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில், அரசு சொல்வதைத்தான் வீரர்கள் செய்வார்கள். என்று கூறினார்.




இந்திய வீரர்களிடம் ஆசியக் கோப்பை இல்லை..
இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கைகுலுக்க மறுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது அதையும் தாண்டிச் சென்றுவிட்டது. சமீபத்தில் முடிவடைந்த 2026 மகளிர் ஆசியக் கோப்பையில், இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து இந்திய அணி பட்டத்தை வென்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்க அங்கு வந்திருந்தார். இந்தநிலையில், நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சராகவும் உள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க மறுத்தது. இந்திய அணி கோப்பையின்றி வெறும் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா திரும்பியது.
ALSO READ: இந்திய வீரர்களுக்கு அன்பிட் ஜெர்சி.. தலையிட்ட பிசிசிஐ.. என்ன நடந்தது..?
2025ல் நக்வியை புறக்கணித்த இந்திய அணி:
கோப்பையை ஏற்க மறுக்கும் இந்த மரபை 2025-ஆம் ஆண்டு இந்திய ஆண்கள் அணி தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை வென்றது. கோப்பையை வழங்குவதற்காக மொஹ்சின் நக்வியும் அங்கு வந்திருந்தார். அப்போதும் இந்திய ஆண்கள் அணி அதை ஏற்க மறுத்து, கோப்பையின்றித் திரும்பியது.