AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை… அப்படி என்ன பண்ணாங்க?

Vaibhav Sooryavanshi : இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை… அப்படி என்ன பண்ணாங்க?
வைபவ் சூர்யவன்ஷி - அபிஷேக் சர்மா
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jul 2026 21:04 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதற்கு முன் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணி அடுத்த சில மாதங்களிலேயே 2 நாடுகளுக்கு இடையே டி20 தொடர்களை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில் பயிற்சியாளரை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IND W vs ENG W: நாட்கள் முதல் ஓவர்கள் வரை.. ஆடவர் மற்றும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள வித்தியாசம்!

ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய 15 வயதே ஆகும் சூர்யவன்ஷி இங்கிலாந்த்துக்கு எதிரான டி20 தொடர் மூலம் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்து இந்தியாவுக்கு இளம் வயதில் சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். ஆனால் இங்கிலாந்து தொடரில் அவரது செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 போட்டிகளிலும் முறையே 13, 14, 15 என மொத்தம் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரன்கள் குறைவாக இருந்தாலும் இந்த போட்டியில் 5 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

அபிஷேக் சர்மா – வைபவ் சூர்யவன்ஷிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் பின்னர் அவரது ஆட்டத்தில் தடுமாற்றங்கள் தெரிந்தன. அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் முதல் போட்டியில் 49 ரன்களும், 2வது போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் 59 ரன்களும், 2வது போட்டியில் 43 ரன்களும் எடுத்து நம்பிக்கையளித்தார். ஆனால் அடுத்த 2 போட்டிகளில் முறையே 10 மற்றும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

இதையும் படிக்க : IND vs ENG: ப்ரூக்கும் சால்ட்டும் அதிரடி.. 4வது போட்டியை வென்ற இங்கிலாந்து..!

இந்த நிலையில் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆக்ரோஷமாக விளையாடுவதை தவிர்த்து பொறுப்புடன் விளையாட வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு பாலையும் சிக்சர் அடிப்பதை விட பொறுப்புடன் விளையாட வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow Us