AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: ப்ரூக்கும் சால்ட்டும் அதிரடி.. 4வது போட்டியை வென்ற இங்கிலாந்து..!

IND vs ENG 4th T20 Highlights: இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டி20ஐ போட்டியில் இங்கிலாந்து, இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெல்ல முடியாத முன்னிலை பெற்றது. இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் டி20ஐ தொடர் வெற்றி இதுவாகும்.

IND vs ENG: ப்ரூக்கும் சால்ட்டும் அதிரடி.. 4வது போட்டியை வென்ற இங்கிலாந்து..!
Ind Lose Series
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Jul 2026 01:35 AM IST

இந்தியா – இங்கிலாந்து இடையிலான (IND vs ENG) நான்காவது டி20ஐ போட்டியில் இங்கிலாந்து, இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெல்ல முடியாத முன்னிலை பெற்றது. இந்தியாவிற்கு (Indian Cricket Team) எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் டி20ஐ தொடர் வெற்றி இதுவாகும். இந்திய அணியின் நீண்டகால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய இங்கிலாந்து, வெறும் 1 விக்கெட் இழப்பில் 13.5 ஓவர்களில் போட்டியை வென்றது.

ALSO READ: 80 அடித்து காப்பாற்றிய ஷ்ரேயாஸ்.. மீண்டும் டாப் ஆர்டர் சொதப்பல்.. 159 ரன்களை துரத்துமா இங்கிலாந்து?

கேப்டன் ஹாரி ப்ரூக் அதிரடி:


கேப்டன் ஹாரி புரூக் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79* ரன்கள் குவித்து ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக பில் சால்ட் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 59* ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 68 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 146* ரன்கள் சேர்த்து, அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சேஸிங்கில் ஈடுபட்ட இங்கிலாந்து, 13 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெறும் 8 ரன்களுக்கு ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது தவித்தனர்.

ஷ்ரேயஸ் ஐயர் மட்டுமே பேட்டிங்கில் போராட்டம்:

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. கேப்டனின் முடிவை அணியால் செயல்படுத்த முடியவில்லை. ஐயர் 49 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்து, ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியை வழிநடத்தினார்.

ALSO READ: 3 போட்டிகளில் வாய்ப்பு.. 3லிலும் சொதப்பல்.. தடுமாறும் வைபவ் சூர்யவன்ஷி!

ஐயரைத் தவிர, வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும், இஷான் கிஷன் 4 ரன்களும், சிவம் துபே 22 ரன்களும், திலக் வர்மா 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களும், அக்சர் படேல் 1 ரன்னும் இந்திய அணிக்காக எடுத்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow Us