India vs Bangladesh: இருநாட்டு தொடரை நடத்துங்க.. பிசிசிஐக்கு கடிதம் எழுதிய வங்கதேசம்..!
BCCI - BCB: இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு கிரிக்கெட் நாடுகளுக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக 'டெய்னிக் ஜாக்ரன்' பத்திரிகையின் ஒரு அறிக்கை தெரிவித்தது.
பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, இந்தியாவில் நடைபெறவிருந்த 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி மறுத்திருந்தது. தற்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான (BCCI) தனது உறவை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. பிரதமர் தாரிக் ரஹ்மானின் புதிய அரசாங்கத்தின் கீழ் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த 2026ம் ஆண்டின் மோசமான முடிவைத் தவிர்த்து, ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) தற்போது இந்தியாவுடனான தனது உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஒரு கடிதம் எழுதியுள்ளது.
ALSO READ: ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த 30 நாட்களில் 10 டி20 போட்டி.. வெளியான இந்திய அணியின் அட்டவணை!
வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடிதம்:
இந்தியா – வங்கதேசம் ஆகிய இரு கிரிக்கெட் நாடுகளுக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக ‘டெய்னிக் ஜாக்ரன்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவித்தது. மேலும், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த வங்கதேசத்திற்கான 6 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் சுற்றுப்பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ, பிசிசி-யிடம் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. அந்தத் தொடர் 2026 செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.




வங்கதேசத்தில் விளையாடுமா இந்திய அணி..?
வருகின்ற 2027ம் ஆண்டு ஆசியக் கோப்பையை வங்கதேசம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசத்திற்குப் பயணம் செய்ய மறுக்கக்கூடும் என்பதால், இந்தியாவின் ஈடுபாடு இப்போட்டியை இலங்கைக்கோ அல்லது துபாய்க்கோ மாற்ற நிர்பந்திக்கலாம். இப்போட்டியை மற்றொரு நாட்டிற்கு மாற்றுவது வங்கதேசத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், செப்டம்பர் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் குறித்து பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தத் தொடரில் 3 ஒருநாள் போட்டிகளும் 3 டி20 சர்வதேசப் போட்டிகளும் விளையாடப்பட இருக்கிறது.
ALSO READ: பொதுவெளியில் கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு.. யுவராஜ் சிங் வருத்தப்பட்ட காரணம் என்ன?
இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே என்ன பிரச்சனை?
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சர்ச்சை முஸ்தஃபிசூர் ரஹ்மானுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது. பிசிசிஐ-யின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வீரரை விடுவித்தது. சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்து, முழுவதுமாக வெளியேறியது.