Team India: 2027 ஒருநாள் உலகக் கோப்பை.. ரிஷப் பண்ட் இடத்தை பிடிக்கும் சஞ்சு சாம்சன்!
Rishabh Pant vs Sanju Samson: வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைத்தால், அது ஒருநாள் அணிக்கு சஞ்சு மீண்டும் திரும்புவதாக அமையக்கூடும். ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு, அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் விளைவாகும்.
ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முழுவதும் தயாராக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதற்கான போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் போட்டியில் ரிஷப் பண்டை விட சஞ்சு சாம்சனே சரியான தேர்வாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணமாக, ஐபிஎல் 2026-ல் இரு வீரர்களின் சிறப்பான ஆட்டமே கருதப்படுகிறது. இது, டி20 போட்டிக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதை அவர்களுக்குக் கடினமாக்கியுள்ளது.
ALSO READ: உலகக் கோப்பையில் ரோஹித்-க்கு கிடைக்காத வாய்ப்பு.. மன்னிப்பு கேட்ட முன்னாள் தேர்வாளர்..!
இரண்டாவது விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி:
ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார். இருப்பினும், இரண்டாவது விக்கெட் கீப்பர் குறித்து சாம்சன் மற்றும் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது இன்னும் முடிவாகவில்லை. இந்திய அணி நிர்வாகம் இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தற்போது இரு விக்கெட் கீப்பர்களில் சாம்சனின் பெயரே முன்னுரிமைத் தேர்வாக இருப்பதாகவும் தெரிகிறது.




2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சஞ்சு சாம்சன் கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், காயம் காரணமாக அவர் அந்தத் தொடரிலிருந்து விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு இந்தியா எந்த ஒருநாள் தொடரிலும் விளையாடவில்லை.
ஐபிஎல் 2026-க்குப் பிறகு, இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களும் திட்டமிடப்பட்டுள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியைக் கட்டமைப்பதற்கு இந்தத் தொடர்கள் முக்கியமானவை என்பதால், இந்தியத் தேர்வாளர்களும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கிறது?
வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைத்தால், அது ஒருநாள் அணிக்கு சஞ்சு மீண்டும் திரும்புவதாக அமையக்கூடும். ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு, அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் விளைவாகும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக சாம்சன் திகழ்ந்தார். இதுமட்டுமின்றி, ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே அணிக்காக எட்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் 2 சதங்கள் உள்பட 304 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ: தோல்வியால் துவண்ட ரிஷப் பண்ட்.. சஞ்சீவ் கோயங்கா செய்த செயல்.. ரசிகர்கள் ஷாக்!
ஒருநாள் போட்டி அணியிலிருந்து பண்ட்க்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படும்?
ஐபிஎல் 2026-ல் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட், எ8 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட, 27 சராசரியில் 189 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுமட்டுமின்றி, கடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதில் விளையாடவில்லை. பண்டின் கடைசி ஒருநாள் போட்டி 2024-ல் இலங்கைக்கு எதிராக அமைந்தது.
ஒருநாள் போட்டிகளில் பண்ட் மற்றும் சாம்சன் மோதல்:
ஒருநாள் போட்டிகளில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பண்டை விட சஞ்சு முன்னிலையில் உள்ளார். ரிஷப் பண்ட் 31 ஒருநாள் போட்டிகளில் 27 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 33.50 சராசரியில் 871 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம், சஞ்சு சாம்சன் 16 ஒருநாள் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 56.67 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.