AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: 2027 வரை சனியின் பார்வையால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம்!

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்படி கணித்தால், 2026-2027 காலகட்டத்தில் சனி பெயர்ச்சியால் மிதுனம், மகரம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவானின் செல்வாக்கு இவர்களுக்கு நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது.

Astrology: 2027 வரை சனியின் பார்வையால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Jul 2025 11:32 AM IST

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் சேர்க்கைகள், பெயர்ச்சிகள் உள்ளிட்டவை மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. இது தனி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கும் இடம் பெயரும். அதேசமயம் இந்த நகர்வு காரணமாக 12 ராசிகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் உண்டாகும். இதில் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இன்னொரு ராசிக்கு செல்ல எடுத்துக் கொள்கிறார். சனி பகவானைக் கண்டால் பலரும் அஞ்சுகிறார்கள். அவர் நீதியின் தேவன் என அழைக்கப்படுகிறார். சரி, தவறு என ஒரு மனிதனுக்கு சராசரியாக தாக்கத்தைக் கொடுக்கிறார். அதனால் தான் சனி கொடுக்கவும், கெடுக்கவும் செய்யும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் 2027 ஆம் ஆண்டு வரை சனி பகவனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றிக் காணலாம்.

இதுவரை கும்ப ராசியில் சஞ்சரித்து வந்த சனி மீன ராசிக்கு இடம் பெயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின்படி 2026ல் சனிப்பெயர்ச்சி என குறிப்பிடப்படுகிறது. எது எப்படியாயினும் சனி பகவான் 2027 வரை மீன ராசியில் இருப்பார். இதன் காரணமாக, ஒரு மைய திரிகோண ராஜ யோகம் உருவாகும்.

Also Read: 2025 ஆடி மாதப் பிறப்பு எப்போது? .. அதன் முக்கியத்துவம் தெரியுமா?

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

  1. மிதுனம்: கேந்திர திரிகோண ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இது மிகவும் லாபகரமாக இருக்கும். அதைத் தவிர, ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையிலும் லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
  2. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் செல்வாக்கு சாதகமாக இருப்பதால்,  நிதி ரீதியாக அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
  3. மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் தாங்கள் செய்யும் வேலைகளில் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சனியின் செல்வாக்கால், இந்த ராசிக்காரர்களுக்கு 2027 வரை எந்த நிதிப் பிரச்சினையும் இருக்காது. அதைத் தவிர, எதிர்பாராத வழிகளில் பணம் அவர்களுக்கு வந்து சேரும். இதன் மூலம், வீட்டில் செல்வம் அதிகரிக்கும், மேலும் அவர்கள் நிதி ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய நேரம் செலவிடுவார்கள்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us