Dream Astrology: உங்கள் கனவில் இதெல்லாம் கண்டால் விரைவில் டும் டும் டும் தான்!
பூக்கள், குங்குமம், வளையல்கள் போன்ற மங்களகரமான பொருட்களைக் கனவில் காண்பது திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. கோவில் அல்லது திருமண மண்டபத்தில் இருப்பதைக் கனவில் காண்பதும் நல்ல அறிகுறியாகும். அப்படியான கனவுகளின் அர்த்தம் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

கனவு என்பது அனைவருக்கும் பொதுவானது. அது நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ஒன்றாக இருக்கும். ஆனால் அத்தகைய கனவு நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கிறதா என்பதில் தான் விஷயமே உள்ளது. சில கனவுகள் நம்மை பயமுறுத்தும் அளவுக்கு கொடூரமாக இருக்கும். சிலவை தூக்கத்தில் கூட நாம் மகிழ்ச்சியுடன் இருப்பது போல இருக்கும். சாஸ்திரத்தில் இத்தகைய கனவுகளுக்கு என்ன அர்த்தம் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்மறையான கனவுகள் வந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சில கனவுகள் நம் எதிர்காலத்தின் நிகழ்வாக கூட தோன்றலாம். அப்படியாக திருமண வாழ்க்கை விரைவில் அமைய சில கனவுகள் அறிகுறியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
கனவில் இதெல்லாம் கண்டால் விரைவில் டும் டும் டும் தான்!
அதன்படி, ஒருவர் தனது கனவில் அழகான பூக்களைக் கண்டால் மிகவும் பாசிட்டிவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பூ மாலைகள் அல்லது ரோஜாக்களைப் பார்த்தால் அத்தகைய கனவு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் காதல் மற்றும் திருமண வாழ்க்கை தொடங்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது என சொல்லப்பட்டுள்ளது. திருமணமாகாத ஒருவருக்கு அத்தகைய கனவு இருந்தால், விரைவில் ஒரு திருமண வரம் கைகூடும் என அர்த்தமாகும்.
ஒரு ஆண் அல்லது பெண் தங்கள் உள்ளங்கையில் குங்குமம் இருப்பது போல காட்சி வந்தாலோ அல்லது கனவில் நெற்றியில் குங்குமம் இருப்பது போல உணர்ந்தாலோ அத்தகைய கனவு மிகவும் மங்களகரமான கனவாகக் கருதப்படுகிறது. இந்த கனவு திருமணம் வெகுவிரைவில் நடக்கும் என்பதன் தொடக்கமாக அமையும். இந்த கனவு வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் அதிர்ஷ்டம் வரும் என்பதையும், திருமணம் செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்பதையும் குறிக்கிறது.
மங்கள பொருட்களை கண்டாலும் சுபம்
நீங்கள் உங்கள் கனவில் மணமகள் உடையணிந்த ஒரு பெண்ணையோ அல்லது மணமகன் உடையணிந்த ஒரு ஆணையோ கண்டால், அது விரைவில் உங்களுக்கு ஒரு திருமண வாழ்வை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை குறிக்கிறது. இந்த கனவு உங்கள் ஜாதகத்தில் திருமணத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாக பார்க்கபப்டுகிறது. அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கான பேச்சுக்கள் குடும்பத்தில் தொடங்கும் என்று அர்த்தமாகும்.
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கனவில் வளையல்கள், நெற்றியில் குங்குமம், தாலி போன்ற நல்ல பொருட்களை கண்டால் அது திருமணம் அல்லது திருமண உறவு தொடர்பான சில செய்திகள் விரைவில் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும். இவை அனைத்தும் இந்து கலாச்சாரத்தில் திருமண வாழ்க்கையின் அடையாளங்களாகக் கருதப்படுபவையாகும்.
ஒரு கோவிலில் திருமணம் நடப்பதை நீங்கள் கண்டாலோ அல்லது உங்களை ஒரு திருமண மண்டபத்தில் இருப்பதாக காட்சிகள் வந்தாலோ, அந்த கனவு மிகவும் நல்ல அறிகுறியாகும். கடவுளின் அருளால், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதும், சரியான நேரத்தில் உறவு இறுதி செய்யப்படும் என்பதையும் இது காட்டுகிறது என்பது அர்த்தமாகும்.
(கனவு அறிவியல் சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதன் அறிவியல் விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)