AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரிய கிரக சேர்க்கை.. துர்க்கை அருளால் 3 ராசிக்கு செம லக்!

Maha Navami Astrology: 2025 மகாநவமி நாளில் அரிய வகை கிரக சேர்க்கை நடைபெறுகிறது. சூரியன், புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களின் ஒருங்கிணைந்த யோகங்களால், 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக, சிம்மம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் அருளால் பொற்காலம் தொடங்கும்.

அரிய கிரக சேர்க்கை.. துர்க்கை அருளால் 3 ராசிக்கு செம லக்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 01 Oct 2025 08:53 AM IST

ஜோதிடத்தில் அரிய வகை கிரகங்களின் சேர்க்கை என்பது எப்போதாவது நடைபெறுவதுண்டு. இதனால் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு, நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (அக்டோபர் 1, 2025) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள துர்கா தேவியின் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில் துர்கா தேவியை வழிபட்டால் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும், இத்தகைய மகாநவமி நாளில் ஒரு அரிய கிரக சேர்க்கை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துர்கா தேவி மூன்று ராசிகளின் மீதும் சிறப்பு அருளைக் காண்பிப்பார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நவக்கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் இளவரசரான புதனும் இணைந்து புத்தாதித்ய யோகத்தை உருவாக்குகிறார்கள். புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னியில் உள்ளது. இது பத்ர ராஜ்ய யோகத்தை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்திற்கு காரணமான கிரகமான சுக்கிரன், குருவுடன் அர்த்தகேந்திர யோகத்தையும் உருவாக்குகிறார். இதன் விளைவாக, மகாநவமி நாளில் கிரகங்களின் இந்த அரிய சேர்க்கை காரணமாக, துர்க்கையின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

  1. சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் நன்மை பயக்கும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். புதிய தொடர்புகள் மூலம் வணிக நன்மைகளைப் பெறுவீர்கள். பணத்தைச் சேமிப்பீர்கள். செல்வாக்கு மிக்கவர்களுடன் பழக்கம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையைப் பெறுவீர்கள். நீங்கள் தொடங்கும் எந்த விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இடையே  உறவுகள் மேம்படும். நிதி நிலை சீராக இருக்கும்.  எதிலும் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இந்த நேரம் நன்மை பயக்கும்.
  2. கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சில சாதகமான பலன்களால் நிறைந்திருக்கும். வீட்டிற்கு வெளியே உள்ள உறவினர்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மேலும், குடும்ப உறுப்பினர்கள் நேரம் செலவிடுவீர்கள். நீண்ட காலமாக பிரச்சனையில் இருந்த பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
  3. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்ல காலமாக இருக்கும். வியாபார விவகாரங்கள் மேம்படும். தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த ராசி மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.  போட்டி தேர்வுகளுக்குத் தயாராவதில் வெற்றி பெறுவீர்கள். விரைவில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.  காதல் உறவு திருமணத்தில் முடிவடையும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us