Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. அஞ்சலக ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்!

Post Office Recurring Deposit Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சத்தை பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Feb 2026 13:08 PM IST
மனிதர்கள் நிதி சிக்கல்கள் அற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் உள்ளது. ஆனால், சமீப காலமாக சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. 

மனிதர்கள் நிதி சிக்கல்கள் அற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் உள்ளது. ஆனால், சமீப காலமாக சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. 

1 / 5
அவ்வாறு மோசடிகளில் சிக்காமல் முதலீடு செய்ய சிறந்தது தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் பெற உதவும் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அவ்வாறு மோசடிகளில் சிக்காமல் முதலீடு செய்ய சிறந்தது தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் பெற உதவும் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 5
அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் ஒரு அட்டகாசமான திட்டம் தான் அஞ்சலக ஆர்டி. ஐந்து ஆண்டுகள் கால அளவீடு கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். 

அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் ஒரு அட்டகாசமான திட்டம் தான் அஞ்சலக ஆர்டி. ஐந்து ஆண்டுகள் கால அளவீடு கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். 

3 / 5
அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு ரூ.3,000 முதலீடு செய்வீர்கள். இந்த ரூ.3,000-த்தை அப்படியே அஞ்சல ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் ரூ.3,000 முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரு ஆண்டில் ரூ.36,000 சேகரித்திருப்பீர்கள். 

அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு ரூ.3,000 முதலீடு செய்வீர்கள். இந்த ரூ.3,000-த்தை அப்படியே அஞ்சல ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் ரூ.3,000 முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரு ஆண்டில் ரூ.36,000 சேகரித்திருப்பீர்கள். 

4 / 5
இவ்வாறு நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை தொடரும் பட்சத்தில் மொத்தமாக ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2,14,097 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை தொடரும் பட்சத்தில் மொத்தமாக ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2,14,097 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5