AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமண உறவில் சத்தமின்றி உருவாகும் எமோஷனல் இடைவெளி!

'க்யயட் க்விட்டிங்' என்பது திருமண உறவில் தம்பதியர் வெளிப்படையாகப் பிரியாமல், ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு உணர்வுரீதியாக முற்றிலும் விலகி வாழும் ஒரு புதிய போக்கு ஆகும். விவாகரத்து stigma மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக தம்பதியர் சண்டைகளைத் தவிர்த்து, வெறும் கடமைகளை மட்டும் செய்யும் ரூம்மேட்களைப் போல வாழத் தொடங்குகின்றனர். நேர்மையான உரையாடல்கள் இல்லாததால் இந்த எமோஷனல் இடைவெளி நிரந்தரமாகி, தம்பதியரின் திருமண வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Aug 2026 15:00 PM IST
திருமண பந்தத்தில் சண்டை சச்சரவுகள் அல்லது சட்டப்பூர்வ விவாகரத்து ஏதுமின்றி ஒருவருக்கொருவர் உணர்வுரீதியாக விலகுவதையே 'க்யயட் க்விட்டிங்' என்கிறார்கள்.
பெரிய அளவிலான விவாதங்களோ அல்லது வாக்குவாதங்களோ இல்லாமல் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமே முயற்சி செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடுவார்கள்.
வெளியே சாதாரண தம்பதியராகத் தெரிந்தாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் எமோஷனல் பிணைப்பு முற்றிலும் அறுந்துபோய்விடும்.
இது தம்பதியரைத் தம்பதிகளாக வாழ வைக்காமல் ஒரே வீட்டில் வாழும் ரூம்மேட்களைப் போல மாற்றக்கூடிய ஒரு அமைதியான சூழ்நிலையாகும்.

திருமண பந்தத்தில் சண்டை சச்சரவுகள் அல்லது சட்டப்பூர்வ விவாகரத்து ஏதுமின்றி ஒருவருக்கொருவர் உணர்வுரீதியாக விலகுவதையே 'க்யயட் க்விட்டிங்' என்கிறார்கள். பெரிய அளவிலான விவாதங்களோ அல்லது வாக்குவாதங்களோ இல்லாமல் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமே முயற்சி செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடுவார்கள். வெளியே சாதாரண தம்பதியராகத் தெரிந்தாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் எமோஷனல் பிணைப்பு முற்றிலும் அறுந்துபோய்விடும். இது தம்பதியரைத் தம்பதிகளாக வாழ வைக்காமல் ஒரே வீட்டில் வாழும் ரூம்மேட்களைப் போல மாற்றக்கூடிய ஒரு அமைதியான சூழ்நிலையாகும்.

1 / 5
இந்தச் சூழ்நிலையில் தம்பதியர் ஒரே வீட்டில் வாழ்வதையும், குழந்தைகளைப் பராமரிப்பதையும், குடும்பச் செலவுகளையும் சரியாகச் செய்து முடிப்பார்கள்.
ஆனால், ஆழமான உரையாடல்கள், காதல், அன்யோன்யம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார்கள்.
பிரச்சினைகளைப் பற்றிப் பேசித் தீர்ப்பதை விட, மோதல்களைத் தவிர்க்கவே அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.
ஒரு உறவில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான அன்பும் அக்கறையும் குறைந்து, வெறும் இயந்திரத்தனமான கடமைகளாக மட்டுமே வாழ்க்கை சுழலும்.

இந்தச் சூழ்நிலையில் தம்பதியர் ஒரே வீட்டில் வாழ்வதையும், குழந்தைகளைப் பராமரிப்பதையும், குடும்பச் செலவுகளையும் சரியாகச் செய்து முடிப்பார்கள். ஆனால், ஆழமான உரையாடல்கள், காதல், அன்யோன்யம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார்கள். பிரச்சினைகளைப் பற்றிப் பேசித் தீர்ப்பதை விட, மோதல்களைத் தவிர்க்கவே அவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஒரு உறவில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான அன்பும் அக்கறையும் குறைந்து, வெறும் இயந்திரத்தனமான கடமைகளாக மட்டுமே வாழ்க்கை சுழலும்.

2 / 5
இது பெரும்பாலும் திட்டமிட்டு எடுக்கப்படும் முடிவு அல்ல, மாறாகப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க உருவாக்கப்படும் ஒரு தற்காப்பு முறையாகும்.
சமூகத்தில் விவாகரத்தால் ஏற்படும் அவப்பெயர், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் குடும்ப அமைப்பைக் காப்பாற்றவே பலர் இப்படி வாழ்கிறார்கள்.
வெளியில் பார்ப்பதற்கு இவர்களுடைய திருமணம் மிகவும் அமைதியாகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாதது போலவும் காட்சி அளிக்கும்.
ஆனால், உண்மையில் உள்ளுக்குள் தம்பதியருக்குள் அதிக தனிமையும், சொல்ல முடியாத மன உளைச்சலும் நிறைந்து காணப்படும்.

இது பெரும்பாலும் திட்டமிட்டு எடுக்கப்படும் முடிவு அல்ல, மாறாகப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க உருவாக்கப்படும் ஒரு தற்காப்பு முறையாகும். சமூகத்தில் விவாகரத்தால் ஏற்படும் அவப்பெயர், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் குடும்ப அமைப்பைக் காப்பாற்றவே பலர் இப்படி வாழ்கிறார்கள். வெளியில் பார்ப்பதற்கு இவர்களுடைய திருமணம் மிகவும் அமைதியாகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாதது போலவும் காட்சி அளிக்கும். ஆனால், உண்மையில் உள்ளுக்குள் தம்பதியருக்குள் அதிக தனிமையும், சொல்ல முடியாத மன உளைச்சலும் நிறைந்து காணப்படும்.

3 / 5
நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத மனக் கசப்புகள், அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் எமோஷனல் சோர்வு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.
இருவரில் ஒருவர் இந்த உறவைக் காப்பாற்ற எவ்வளவு முயன்றும் எந்த மாற்றமும் இல்லாதபோது, அவர்கள் உணர்வுரீதியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த விலகல் காலப்போக்கில் தம்பதியருக்கு இடையே ஒரு பெரிய சுவரை எழுப்பி, இயல்பான அன்பைப் பகிர முடியாதபடி செய்துவிடும்.
இதன் விளைவாக, ஒருவருக்கொருவர் இருந்த பகிர்தல்களும் நம்பிக்கையும் முற்றிலுமாக மறைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத மனக் கசப்புகள், அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் எமோஷனல் சோர்வு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இருவரில் ஒருவர் இந்த உறவைக் காப்பாற்ற எவ்வளவு முயன்றும் எந்த மாற்றமும் இல்லாதபோது, அவர்கள் உணர்வுரீதியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விலகல் காலப்போக்கில் தம்பதியருக்கு இடையே ஒரு பெரிய சுவரை எழுப்பி, இயல்பான அன்பைப் பகிர முடியாதபடி செய்துவிடும். இதன் விளைவாக, ஒருவருக்கொருவர் இருந்த பகிர்தல்களும் நம்பிக்கையும் முற்றிலுமாக மறைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

4 / 5
இந்த அமைதியான விலகலின் பெரிய ஆபத்தே, காலப்போக்கில் உணர்ச்சியற்ற இந்த தனிமையை இயல்பான ஒன்றாகத் தம்பதியர் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவதுதான்.
நேர்மையான பேச்சும் உரையாடலும் இல்லாததால், இந்த இடைவெளி நிரந்தரமாகி உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதை மிகவும் கடினமாக்குகிறது.
இந்தத் திருமண உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றால் இருவருமே மீண்டும் மனப்பூர்வமாக முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஒருவர் முற்றிலும் எமோஷனலாக விலகிவிட்ட பிறகு, அவரை மீண்டும் இந்த உறவுக்குள் மீட்டெடுப்பது மிகப்பெரிய சவாலாக அமையும்.

இந்த அமைதியான விலகலின் பெரிய ஆபத்தே, காலப்போக்கில் உணர்ச்சியற்ற இந்த தனிமையை இயல்பான ஒன்றாகத் தம்பதியர் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவதுதான். நேர்மையான பேச்சும் உரையாடலும் இல்லாததால், இந்த இடைவெளி நிரந்தரமாகி உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதை மிகவும் கடினமாக்குகிறது. இந்தத் திருமண உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றால் இருவருமே மீண்டும் மனப்பூர்வமாக முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவர் முற்றிலும் எமோஷனலாக விலகிவிட்ட பிறகு, அவரை மீண்டும் இந்த உறவுக்குள் மீட்டெடுப்பது மிகப்பெரிய சவாலாக அமையும்.

5 / 5
Follow Us