AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெற்றோரே உஷார்: உங்க குழந்தைகள் போதை வலைக்குள் விழாமல் தடுத்து காப்பது எப்படி?

Student Substance Abuse Prevention: பள்ளி மாணவர்களின் திடீர் நடத்தை மாற்றங்கள் மற்றும் தேவையில்லாத பணத் தேவைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காவல்துறையுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணிப்பதோடு, வளாகத்தினுள் ஆசிரியர்களின் சிறப்புக் கண்காணிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோரே உஷார்: உங்க குழந்தைகள் போதை வலைக்குள் விழாமல் தடுத்து காப்பது எப்படி?
பள்ளி மாணவர்கள் போதைத் தடுப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Aug 2026 18:10 PM IST

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க முறையான கண்காணிப்பும் விழிப்புணர்வும் மிகவும் அவசியமாகும். மாணவர்கள் திடீரென படிப்பில் கவனம் குறைவது, தனிமை விரும்புவது மற்றும் அதிக கோபப்படுவது போன்ற நடத்த மாற்றங்களை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும். தேவையின்றி அதிகப் பணம் கேட்பதும், தூக்கமின்மை மற்றும் நண்பர்கள் வட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படுவதும் போதைப்பழக்கத்தின் முக்கிய அறிகுறிகளாகும். பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை காவல்துறையுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆசிரியர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்களை அமைப்பது அவசியமாகும்.

போதைப்பொருள் கண்காணிக்கும் முறைகளும் தடுப்பு நடவடிக்கைகளும்

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினரை இந்த நச்சுப் பிடியில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் எதிர்காலத்தைச் சீரமைக்கவும் முறையான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிக அவசியமாகின்றன.

மாணவர்களின் நடத்தை மற்றும் உடல்நல மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தல்

மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும்போது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. திடீரென படிப்பில் ஆர்வம் குறைவது, வகுப்புகளுக்குத் தவறாமல் வராமை, குடும்பத்தினரிடம் இருந்து தனித்து இருப்பது, காரணமின்றி அதிக கோபப்படுவது மற்றும் தூக்கமின்மை போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும்.

மேலும், தேவையின்றி அதிகப் பணம் கேட்பதும் நண்பர்களின் வட்டாரத்தில் சட்டென்று மாற்றம் ஏற்படுவதும் இதில் அடங்கும். இத்தகைய மாற்றங்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி வளாக சுற்றப்புறங்களில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்துதல்

பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை காவல் துறையினருடன் இணைந்து பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நுழைவதைத் தடுக்கவும், மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைப்பது சிறந்த பலனைத் தரும்.

Also Read: இரவில் லேட்-நைட் பிரியாணி ஆசையா? ஆபத்தை தவிர்க்க இத தெரிஞ்சுக்கோங்க!

விழிப்புணர்வு மற்றும் மனநல ஆலோசனைகள் மூலம் போதைத் தடுப்பு

மாணவர்களுக்குப் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறித்துப் பள்ளிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மனஅழுத்தம் மற்றும் சக நண்பர்களின் தவறான தூண்டுதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்துத் தகுதிவாய்ந்த ஆலோசகர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். கண்டிப்பை விட அன்பும் தோழமையான அணுகுமுறையுமே மாணவர்களை இத்தகைய தவறான பாதையிலிருந்து மீட்க உதவும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us