Beauty Tips: பச்சை பாலுடன் இந்த 6 பொருட்கள் சேர்த்து போடுங்க..! முகம் பளபளக்கும், சருமம் மிளிரும்..!
Homemade Beauty Remedies: பச்சைப் பால் சருமப் பராமரிப்பில் அற்புதமான பயன்களைத் தருகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை சுத்தப்படுத்தி, இயற்கையான பளபளப்பைத் தருகிறது. மஞ்சள், கடலை மாவு, தேன், சந்தனம், எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல் போன்ற பொருட்களுடன் கலந்து முகப்பூச்சாகப் பயன்படுத்தலாம். இவை முகப்பரு, கறைகள், வறட்சி போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.

சருமத்தின் அழகை (Skin Care) அதிகரிக்க ஆண்கள், பெண்கள் என அனைவரும் கடைகளில் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை விட, பச்சைப் பால் (Raw Milk) போன்ற இயற்கை வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை உரிந்து, இயற்கையான பளபளப்பைக் கொண்டுவருகிறது. இதை சில சிறப்புப் பொருட்களுடன் கலந்து முகத்தில் தடவினால், சருமம் விரைவாகப் பளபளப்பாகும். சருமத்தை மேம்படுத்துவதற்கு பச்சை பால் ஒரு பயனுள்ள இயற்கை தீர்வாகும். சில பொருட்களுடன் கலந்து தடவுவதன் மூலம், சருமம் இயற்கையான பளபளப்பையும் ஆழமான ஊட்டச்சத்தையும் பெறுகிறது.
பச்சை பால் மற்றும் மஞ்சள்:
மஞ்சளில் கிருமி நாசினிகள் உள்ளது. இவற்றுடன் பச்சை பாலை கலந்து பயன்படுத்தினால் சருமத்தை சுத்தப்படுத்தலாம். பச்சை பால் மற்றும் மஞ்சள் என இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவினால், முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, நிறத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பச்சை பால் மற்றும் கடலை மாவு:
பச்சை பால், கடலை மாவு கலவை சிறந்த பலனை முகத்திற்கு தரும். கடலை மாவு சருமத்தை இறுக்கமாக்கி, கழிவுகளை வெளியேற்றும். அதேநேரத்தில், பால் சருமத்தை ஈரப்பதமாக்கி பொலிவை தரும். இந்த கலவை இறந்த சருமத்தை நீக்கி சருமத்தை பளபளப்பாக்க வைக்க உதவி செய்யும்.
பச்சை பால் மற்றும் தேன்:
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது முகத்தில் ஏற்படும் முகப்பருவைக் குறைக்க உதவி செய்யும். அதன்படி, பால் மற்றும் தேன் கலவையை முகத்தில் பயன்படுத்துவதுமூலம், சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவி செய்யும்.
பச்சை பால் மற்றும் சந்தனப் பொடி:
சந்தனக் கட்டி இயற்கையாகவே உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரும். அதேபோல், பச்சை பால் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. அதன்படி, பச்சை பால் மற்றும் சந்தப்பொடியை கலந்து முகத்தில் பேஸ் பேக் போடும்போது, கோடையில் ஏற்படும் தோல் வெடிப்புகள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பச்சை பால் மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் வெண்மையாக்கும் பண்புகள் உள்ளன. அவை சருமத்தை பளபளப்பாகவும் சுத்தமாகவும் ஆக்குகின்றன. அதேநேரத்தில், இறந்த செல்களை அழிக்கும். பச்சை பால் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
பச்சை பால் மற்றும் கற்றாழை ஜெல்:
கற்றாழை இயற்கையாகவே சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பைக் குறைக்கிறது. பால் மற்றும் கற்றாழை கலவை முகத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது, மேலும் நிறமியையும் குறைக்கிறது.