AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழைக்கால பிசுபிசுப்புக்கு பை-பை: எப்போதும் ‘பிரெஷ்’ஷாக இருக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் முகப்பருக்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க தினமும் இருமுறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். சருமம் வறண்டு போகாமலும் பிசுபிசுப்பின்றியும் இருக்க எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும்.

மழைக்கால பிசுபிசுப்புக்கு பை-பை: எப்போதும் ‘பிரெஷ்’ஷாக இருக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
சன்ஸ்கிரீன்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Aug 2026 10:41 AM IST

மழைக்காலத்தில் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பும் முகப்பருக்களும் ஏற்படுவது இயல்பாகும். இதிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க தினமும் இருமுறை லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். முகத்தில் பிசுபிசுப்பு இருந்தாலும், சருமத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்க எண்ணெய் இல்லாத ‘ஜெல்’ வகை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்த வேண்டும். மேகமூட்டமான நாட்களிலும் சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கும் என்பதால், தவறாமல் சன்ஸ்கிரீன் அணிய வேண்டும். குளிர்ந்த கால நிலையிலும் சருமம் உள்ளிருந்து பொலிவு பெற போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். மேலும், அதிக ரசாயனம் இல்லாத இயற்கை சார்ந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது சருமத் தொற்றுகளைத் தவிர்க்க உதவும்.

சருமத்தைப் பளபளப்பாக பராமரிக்க எளிய வழி

மழைக்காலம் தொடங்கும் போது வெப்பத்தின் தாக்கம் குறைந்தாலும், காற்றில் அதிகரிக்கும் அதிகப்படியான ஈரப்பதம் சருமத்திற்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் சருமத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு சேருவதுடன், முகப்பரு மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் (Fungal infections) ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கச் சில முக்கியப் பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முகத்தைச் சுத்தமாக வைத்திருத்தல்

காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாக சருமத் துளைகளில் அழுக்குகளும் எண்ணெயும் எளிதில் தங்கிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் இருமுறை லேசான (Mild/Gel-based) ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி, முகப்பருக்கள் உருவாவதைத் தடுக்கும்.

சரியான ஈரப்பதம் வழங்குதல்

மழைக்காலத்தில் பிசுபிசுப்பு அதிகமாக இருப்பதால் பலரும் மாய்ஸ்சரைசரைத் தவிர்க்கின்றனர். ஆனால், சருமத்திற்கு நீர்ச்சத்து மிக அவசியம். எனவே, சருமத் துளைகளை அடைக்காத ‘ஆயில் ஃபிரீ’ (Oil-free) அல்லது ‘ஜெல்’ அடிப்படையிலான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும்.

Also Read: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணுமா? இந்த எண்ணிக்கை எப்படி வந்தது தெரியுமா?

சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு

மேகமூட்டமான வானிலை இருந்தாலும், சூரியனின் தீங்கிழைக்கும் புறஊதா (UV) கதிர்கள் மேக ஊடே ஊடுருவி சருமத்தைப் பாதிக்கும். இதனால் சீக்கிரமே சுருக்கங்களும் கருமையும் தோன்றும். எனவே, வெளியே செல்லும்போது மறக்காமல் ‘சன்ஸ்கிரீன்’ (Sunscreen) அணிய வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல்

குளிர்ந்த காலநிலை காரணமாக தாகம் குறைவாக இருந்தாலும், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கட்டாயமாகும். உடலினுள் நீர்ச்சத்து சீராக இருக்கும்போது தான் நச்சுகள் வெளியேறி, சருமம் இயற்கையான பொலிவைப் பெறும். இந்த எளிய வழிகளைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் உங்கள் சருமத்தைப் பருக்கள் இன்றி ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் பராமரிக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us