Skin Care: முகம் கருமையாகவும் பொலிவிழந்தும் காணப்படுகிறதா? சரிசெய்யும் கடலை மாவு – எலுமிச்சை மேஜிக்!
Gram Flour and Lemon Face Pack: கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும். கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. எலுமிச்சை சாறு சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
சூரிய ஒளி, மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு ஆகியவற்றால் முகத்தில் கருமையும் பொலிவின்மையும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, பலர் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களையும் சிகிச்சைகளையும் நாட முனைகின்றனர். ஆனால், வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு முகப் பூச்சு, சருமத்திற்கு (Skin Care) நல்ல பொலிவைத் தருவதோடு, கருமையைக் குறைக்கவும் உதவும். அத்தகைய ஃபேஷ் மாஸ்க்களில் (Face Mask) ஒன்றுதான் கடலை மாவு-எலுமிச்சை ஃபேஷ் மாஸ்க் பயன் தரும். இது ஆயுர்வேதத்தில் உடனடிப் பொலிவிற்காகவும், பொலிவை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சருமம் நன்கு கருமையாக இருக்கும்போதும், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போதும் இதைப் பயன்படுத்தினால் நல்ல பலன்களைக் காணலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், இதை எப்படித் தயாரிப்பது? தேவையான பொருட்கள் என்னென்ன? நல்ல பலன்களைப் பெற இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
ALSO READ: வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க சூப்பர் கொரியன் சன்ஸ்கிரீன்கள்!
கடலை மாவு-எலுமிச்சை பேஷ் மாஸ்க்கான பொருட்கள்
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
- தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன்
- ஒரு சிட்டிகை மஞ்சள்
- ரோஸ் வாட்டர் – தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தயிர் அல்லது பால், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ரோஸ் வாட்டரை சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையான விழுது போல பதம் வருமாறு கலக்கவும்.
பயன்படுத்துவது எப்படி..?
முதலில், உங்கள் முகத்தை ஒரு மென்மையான க்ளென்சரால் சுத்தம் செய்யுங்கள். பிறகு, இந்த கடலை எலுமிச்சையை கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் பூசுங்கள். உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான பகுதியைத் தவிர்ப்பது நல்லது. இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். இது முழுமையாக காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் தேய்த்து, கழுவி, மென்மையான துண்டால் துடைத்து எடுக்கவும். அதன் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது.




இந்த ஃபேஸ் பேக்கின் நன்மைகள்
கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும். கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. எலுமிச்சை சாறு சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தயிர் அல்லது பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி, பொலிவுடன் தோற்றமளிக்கச் செய்கிறது. இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கவும் உதவுகிறது.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு, கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பேஷ் மாஸ்க் ஒரு இயற்கையான சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. அது சருமத்தை மென்மையாக்குகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் கலவையானது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, புத்துணர்ச்சியான தோற்றத்தைத் தருகிறது.
ALSO READ: ஏசியில் இருப்பது சரும பிரச்சனைகளை ஏற்படுத்துமா? இவை சருமத்தை பாதுகாக்கும்!
வாரத்திற்கு எத்தனை முறை உங்களால் முயற்சி செய்ய முடியும்?
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். இருப்பினும், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள், முதலில் கையில் சிறிதளவு தடவிப் பரிசோதித்துவிட்டு, அதன் பிறகு முகத்தில் தடவுவது நல்லது.