இஸ்ரேலை கண்டிக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம்..
Thirumavalavan Letter to PM Modi: ஈரான் நாட்டில் இருக்கும் அணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது ஏற்ப்புடையது அல்ல என்றும் மத்திய அரசு இதனை கண்டிக்க வேண்டும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு விசிக தலைவர் கடிதம்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் (Israel Iran Conflict) பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஜூன் 13 2025 ஆன நேற்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதாவது ஜூன் 14 2025, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேலில் இருக்கக்கூடிய பல்வேறு நகரங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மத்திய அரசு, இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவ தாக்குதலை கண்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம்:
#ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்!
மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
—————————–
உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்… pic.twitter.com/P4a7XNY2v0— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 13, 2025
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “ உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி இருக்கும் இஸ்ரேலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்றும் மத்திய அரசு இஸ்ரேல் நாட்டின் இந்த தாக்குதலை கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “ ஈரானின் அணுசக்தி சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஈரானின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. இதில் ஈரான் நாட்டை சேர்ந்த முக்கியமான அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்துள்ளனர். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் அத்தகைய அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை நடத்துவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
கள்ள மௌனம் காக்கும் இந்தியா:
ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா என உலக நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்து வரும் நிலையில் இந்தியா அதனை வேடிக்கை பார்த்து வருவதாகவும், இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் தற்போதும் இந்தியா கள்ள மௌனம் காத்து வருவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது.
இப்போதும் இஸ்ரேலை கண்டிக்காமல் மௌனம் காப்பதன் மூலம் மோடி அரசு மீண்டும் தவறிழக்கிறது. எனவே இந்த பிரச்சனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்தியா ராணுவ தாக்குதலில் கண்டிக்க முன் வரவேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது