NEET PG Exam : நீட் முதுகலை தேர்வு.. ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Supreme court on Neet PG Exam : நீட் முதுகலை தேர்வை 2025 ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

டெல்லி, ஜூன் 06 : நீட் முதுகலை தேர்வை (neet pg exam) 2025 ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் (supreme court) அனுமதி அளித்துள்ளது. நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீட் முதுகலை தேர்வை 2025 ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒரே ஷிப்டில் நடைபெற உள்ளது. நீட் முதுகலை தேர்வு 2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடைபெற இருந்த. இந்த தேர்வுக்கு 2.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இரண்டு ஷிப்டுகளில் நீட் முதுகலை தேர்வு நடத்தப்படுவது குறித்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.கே. மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் முதுகலை தேர்வு வழக்கு
நீட் முதுகலை தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடத்துவது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் எனவும் இது நியாயமற்ற முறையில் இருக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், நியாயத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே ஷிப்டில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.




ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீதிமன்றம் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வாரியத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டால், கூடுதல் நேரம் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து, 2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து, 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி நீட் முதுகலை தேர்வை நடத்தலாமா என்று உச்ச நீதிமன்றத்தை தேசியத் தேர்வு வாரியம் நாடியது.
ஆகஸ்ட் 3ல் நீட் முதுகலை தேர்வு
#BREAKING: The Supreme Court has permitted the NEET PG exam to be held on August 3, approving the NBE’s request to postpone the exam to this new date. pic.twitter.com/ol8dN7oo2a
— IANS (@ians_india) June 6, 2025
இது தொடர்பான விசாரணை 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று நீதிபதி பி.கே. மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஏன் தேர்வை நடத்த முடியாது என்றும் இன்னும் இரண்டு மாதங்கள் ஏன் தேவை. இது முழு சேர்க்க செயல்முறையையும் தாமதப்படுத்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், “தேர்வு மையங்கள் போன்ற ஏற்பாடுகள் காரணமாக தேர்வு ஆகஸ்ட் வரை ஒத்திவைக்க கோரிகிறோம். தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் அவகாசம் தேவைப்படுகிறது.
ஒரு சிறிய தவறு கூட கடுமையாக தாக்கங்களை ஏற்படுத்தும். மாணவர்களின் நலனுக்காக மட்டுமே கூடுதல் நேரம். தேர்வை எந்த வகையிலும் சமரசம் செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்றார். தேர்வு எப்போது நடத்தப்பட்டாலும், தேர்வு செயல்முறையின் நேர்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் தேர்வை நடத்துவதில் எந்த சமரசத்தையும் நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார். தொடர்ந்து, நீட் முதுகலை தேர்வு 2025 ஆகஸ்ட் 3ல் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.