PM Modi Meets All-Party Delegation: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. அனைத்து கட்சி குழுக்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி!

Operation Sindoor: பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்த அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை சந்தித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்த குழுவின் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீவிரமான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

PM Modi Meets All-Party Delegation: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. அனைத்து கட்சி குழுக்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி!

அனைத்துக்கட்சி குழுக்களுடன் பிரதமர் மோடி

Updated On: 

10 Jun 2025 22:56 PM

டெல்லி, ஜூன் 10: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று அதாவது 2025 ஜூன் 10ம் தேதி மாலை புது தில்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) அனைத்து கட்சி குழுவின் உறுப்பினர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தின்போது ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை தெரிவிக்க உலகத் தலைநகரங்களுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர்களும் பிரதமர் மோடியுடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குழு உறுப்பினர்களுடன் இணைந்து இரவு உணவை உட்கொண்டார்.

என்ன குழு இது?

59 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் ஐரோப்பியம் ஒன்றியம் உட்பட 33 நாடுகளுக்கு பயணம் செய்தன. இந்த குழுக்களில் பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் அனைவரும் 8 முதல் 9 உறுப்பினர்களை கொண்ட 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டார். அந்த தலைவர் உலகளாவிய அளவில் குழுவை வழிநடத்தினார். இந்த குழுக்கள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விவரித்தது.

குவியும் பாராட்டுகள்:

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏற்கனவே பிரதிநிதிகளை சந்தித்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை தெரிவிக்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார். இந்தக் குழுவில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜ்யந்த் பாண்டா, காங்கிரஸின் சசி தரூர், ஜேடியுவின் சஞ்சய் ஜா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி மற்றும் என்சிபி (எஸ்பி)யின் சுப்ரியா சுலே ஆகியோர் அடங்குவர். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு உலக நாடுகளுக்கு சென்று பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு குறித்து விளக்கம் அளித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர்:

கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2025 மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை இந்திய இராணுவம் மேற்கொண்டது. அப்போது, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை அளித்தது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றதாக இந்திய இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து உலக நாடுகளுக்கு போதுமான விளக்கத்தை அளிக்கவே, இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது.