சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் இருந்த பல்லி.. அசால்டாக பதில் சொன்ன வியாபாரி.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!
7 Years Old Boy Found Lizard in Ice Cream | கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் சுகாதாரம் மற்றும் அவற்றின் தரம் குறித்து பெரிய கேள்வி உள்ளது. அந்த வகையில், பஞ்சாபில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், ஜூன் 10 : பஞ்சாப்பில் (Punjab) சிறுவன் வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐஸ்கிரீம் வியாபாரியிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்ட போது அவர், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரியை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள்
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் ஐஸ்கிரீம்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில், மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்ட போது அதில் மனித கட்டை விரல் இருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதேபோல தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அங்கு மிகவும் பிரபலமான பிளாக் பீன் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, அந்த ஐஸ்கிரீமில் விஷ தன்மை கொண்ட இறந்துப்போன பாம்பு ஒன்று கிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பஞ்சாபில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஐஸ்கிரீமில் இருந்த பள்ளி – அதிர்ந்துப்போன சிறுவன்
Ice Cream में निकली छिपकली
लुधियाना के सुंदर नगर में आइसक्रीम में छिपकली मिलने के बाद हंगामा। बच्चे ने गली में आए विक्रेता से खरीदी थी कुल्फी।
बच्चा जब आइसक्रीम खा रहा था, तभी उसे कटोरी में छिपकली नजर आई। बच्चे की हालत खराब ना हो इसलिए उसे तुरंत अस्पताल ले जाया गया। pic.twitter.com/LUxdbQ6rmD
— Rahul Chauhan (@journorahull) June 9, 2025
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 7 வயது சிறுவன் ஒருவன் சாலையோர தள்ளுவண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்கிரீமில் பள்ளி ஒன்று கிடந்ததை கண்ட சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அது குறித்து சிறுவன் தனது பாட்டியிடம் கூறிய நிலையில், அந்த பகுதி மக்கள் சிலர் ஐஸ்கிரீம் வியாபாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அவர், அந்த ஐஸ்கிரீம் ஆலையில் இருந்து வந்ததாகவும் அதை தான் தயாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறந்த போலீசார், அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பல்லி இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டதால் உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.