AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்வே திட்டங்கள் தாமதம் ஏன்? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த விளக்கம்!

TN railway projects land acquisition: தமிழ்நாட்டில் புதிய ரயில் திட்டங்கள் தாமதம் அடைவதற்கு 26% நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டதே காரணம் என மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். மாநில அரசு விரைந்து நிலங்களை ஒப்படைத்தால் மட்டுமே இத்திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்வே திட்டங்கள் தாமதம் ஏன்? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த விளக்கம்!
அஸ்வினி வைஸ்ணவ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Jul 2026 07:02 AM IST

தமிழ்நாட்டிற்கு ₹27,282 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதை மற்றும் வழித்தட விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபோதிலும், மாநில அரசு நிலம் கையகப்படுத்தித் தருவதில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான காலதாமதமே 5 முக்கிய புதிய ரயில் திட்டங்கள் தொடங்கப்படாமல் நிலுவையில் இருப்பதற்குக் காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. அருண் நேரு எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தபோது மத்திய அமைச்சர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் படிக்க: நாகர்கோவில் கைதி லாக்கப் டெத்.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார்..!

நிலம் ஒதுக்கப்படாத 5 முக்கிய புதிய ரயில் திட்டங்கள்:

தமிழ்நாட்டின் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட 5 முக்கியமான வழித்தடங்களுக்குத் தேவையான நிலங்கள் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை எனப் பேரவையில் விவரிக்கப்பட்டது.

திண்டிவனம் – திருவண்ணாமலை (71 கி.மீ.): செஞ்சி வழியிலான இப் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 276 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 33 ஹெக்டேர் (14%) நிலம் மட்டுமே மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர் – தர்மபுரி (36 கி.மீ.): இத்திட்டத்திற்கு 93 ஹெக்டேர் நிலம் தேவை. ஆனால், அதில் பாதியளவான 47 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. (குறிப்பு: இத்திட்டத்திற்கான நில எடுப்புக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் திட்டப்பணியை உறுதி செய்தது).

அத்திப்பட்டு – புத்தூர் (88 கி.மீ.): சென்னை மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியை இணைக்கும் இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்கள் சிறிதளவு கூட (0%) இதுவரை ஒதுக்கப்படவில்லை.

மன்னார்குடி – பட்டுக்கோட்டை: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மிக முக்கியமான இத்திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும் பணி பூஜ்ஜிய நிலையிலேயே உள்ளது.

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை (52 கி.மீ.): இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களும் இதுவரை மாநில அரசிடமிருந்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்படவில்லை.

26% நிலமே ஒப்படைப்பு – ₹1,465 கோடி வழங்கியும் தாமதம்:

மத்திய அமைச்சர் அளித்த பதிலின்படி, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை மற்றும் இரட்டைப் பாதை திட்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 4,612 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை 26% நிலம் (1,178 ஹெக்டேர்) மட்டுமே ரயில்வே துறைக்குக் கையகப்படுத்தித் தரப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ₹1,465 கோடி நிதி ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், நிர்வாக ரீதியிலான தாமதங்களால் திட்டங்கள் கிடப்பில் கிடப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க: திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை சம்பவம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

‘ரயில் பூமி’ செயலி மற்றும் எதிர்கால நகர்வுகள்:

ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புப் பணிகளை மாநில அரசுகளுடன் இணைந்து விரைவுபடுத்துவதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் அண்மையில் ‘ரயில் பூமி’ என்ற இணையதளச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், நிலப்பறிமுதல் தொடர்பான வழக்குகள், இழப்பீட்டுத் தொகை நிர்ணயத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வனத்துறை அனுமதிகள் கிடைப்பதில் உள்ள தாமதங்களே நிலம் ஒப்படைக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் என மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது. மாநில அரசு விரைந்து நிலங்களை ஒப்படைத்தால் மட்டுமே இத்திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

Follow Us